இலங்கை கல்வி நிர்வாக சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்காக வௌியிடப்பட்ட 2021.06.04 ஆம் திகதி 2,231 ஆம் இலங்க வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக.
மட்டுப்படுத்தப்பட்ட சேவையின் சேவை மூப்பினை அடிப்படையாகக் கொண்டு இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்கான மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் மாற்றங்கள் சிலவற்றை மேற்கொள்வதற்காக அரச சேவைகள் ஆணைக்குழுவுக்கு ஆலோசகைள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. குறித்த திருத்தங்களுக்காக அனுமதி கிடைத்ததன் பின்னர் அது குறித்து வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படவுள்ளது. அதன் அடிப்படையில் விண்ணப்ப முடிவுத்திகதி நீடிக்கப்படும் என்பதாக கல்வி அமைச்சு அறிவித்திருக்கின்றது. முடிவுத் திகதி குறித்த விபரம் வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறியத்தரப்படும்.
0 Comments