முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் தேசிய மீலாத் கிராஅத் மற்றும் பேச்சுப் போட்டிகள் - 2021
01. அறிமுகம்
எம் பெருமானார் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தேசிய ரீதியியாக வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் தேசிய மீலாத் போட்டி நிகழ்ச்சிகளை தற்போது நாட்டில் நிலவும் கோவிட-19 அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு சில வரையறைகளுக்கு உட்பட்டதாக இவ்வருடம் நடாத்துவதற்கு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
போட்டிகளுக்கான ஆக்கங்கள் வீடியோப் பதிவு செய்து கீழ்க்குறிப்பிடப்படும் கூகில் லிங்கில் பதிவேற்றப்படல் வேண்டும்.
02. போட்டி விபரங்கள் மற்றும் விதி முறைகள் பின்வருமாறு.
01. கிராஅத் போட்டிகள்:
கனிஷ்ட பிரிவு
06 – 09 வயதுக்கு உட்பட்டவர்கள்.
சூறத்துல் அஃலா முழு சூறாவும் (ஸப்பி ஹிஸ்ம ரப்பிகல் அஃலா)
இடைநிலைப் பரிவு
10 – 14 வயதுக்கு உட்பட்டவர்கள்.
சூறத்துல் முல்க் (ஆரம்ப 15 வசனங்கள்)
சிரேஷ்ட 15 – 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.
சூறா அர் ரஹ்மான் (ஆரம்ப 30 வசனங்கள்)
02. பேச்சுப் போட்டிகள்:
பேச்சுப் போட்டிகள் (தமிழ், சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆண்
பெண் இருபாலாருக்கும் நடைபெறும்)
தலைப்புகள்
கனிஷ்ட பிரிவு
தாய் நாட்டை நேசிப்போம்.
අපි අපේ මව් දෙශයට ආදරය කරමු.
Let’s love our Mother Land.
( 05 நிமிடங்கள்)
இடைநிலைப் பிரிவு
தொற்று நோயிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்கு இஸ்லாம் காட்டும் முன்மாதிரிகள்.
கிராஅத், சிங்களப் பேச்சு, தமிழ் பேச்சுஇ ஆங்கிலப் பேச்சுப் போட்டிகளுக்கான வயது 2021-10-19 ஆம் திகதியன்று தீர்மானிக்கப்படும்.
போட்டியாளரின் பிறப்புச் சான்றிதழ் (கிராம சேவகர் அல்லது சமாதான நீதவான்ஒருவரினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்) மற்றும் புகைப் படம் (2”X2”) என்பன விண்ணப்பத்துடன் இணைத்து மேலே குறிப்பிட்ட நிகழ்நிலை (online) மூலம் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
பங்குபற்ற விரும்பும் போட்டியாளர்கள் தங்களது ஆக்கங்களை (கிராஅத்இ சிங்களப் பேச்சு,தமிழ் பேச்சு, ஆங்கிலப் பேச்சுப் போட்டிகள்) வீடியோ வடிவில் ஒளிப்பதிவு செய்து மேலே குறிப்பிட்ட நிகழ்நிலை (online) போட்டிகளுக்கான குறியீட்டு இலக்கங்கள் மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய நிகழ்நிலை (online) முகவரியில் மாத்திரம் பதிவேற்றப்படல் வேண்டும்.
விண்ணப்ப முடிவு திகதி 2021.09.20
முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு பெறுமதி மிக்க பரிசில்களும்,
சான்றிதழ்களும் வழங்கப்படும்.
போட்டி விதிகளை மீறியமை அதாவது ஆள்மாறாட்டம், பிறிதொருவரின் ஆக்கங்களை அனுப்புதல் போன்ற முறைகேடான விடயங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் வழங்கப்பட்டபரிசு மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதுடன் எதிர்காலத்தில் திணைக்களத்தினால் நடாத்தப்படும் எந்தவொரு போட்டி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் தகைமை இழக்கப்படும் என்பதனை போட்டியாளர் கவனத்திற்கொள்ளவும்.
தற்போதுள்ள அசாதாரண நிலைமையில் மேற்படி போட்டிகள் தொடர்பாக திணைக்களம்மேற்கொள்ளும் தீர்மானங்களே இறுதியானதாகும்.
எம்.எல்.எம். அன்வர் அலி
பணிப்பாளர் (பதில்)
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
தமிழ் விபரங்களைப் பார்வையிட கீழுள்ள லிங்கில் அழுத்தவும்
4 Comments
What is the headline of the speech we need to prepare
ReplyDeleteThat is tamil speech
Delete3.2F
ReplyDeletePlease please give me the result
ReplyDelete