ad

ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக க.பொ.த.(சா/த) பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியவில்லை



ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக 2020 சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்தார். 


2020 சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய  622000 மாணவர்களில் 169000 வரையிலான மாணவர்கள் அழகியல் பாடத்தை     பயின்ருப்பதாகவும் குறித்த பாடங்களுக்கான பிரயோக பரீட்சைகளுக்காக முகங்கொடுக்க இருப்பதாகவும் குறிப்பிட்ட கல்வியமைச்சர் நிலவுகின்ற கொவிட் நிலைமை காரணமாக பிரயோக பரீட்சையை நடத்த முடியாது உள்ளதாக குறிப்பிட்டார்.   


பிரயோக பரீட்சைகளை முடிந்தளவு அவசரமாக நடத்தி முடித்து பெறுபேறுகளை வெளியிடுவதற்கு ஆயத்தமாக இருந்தபோதிலும் தொழிற்சங்கங்கள் பரீட்சை நடவடிக்கைகளிலிருந்து விலகி இருப்பதன் காரணமாக 620,000 மாணவர்களின் பெறுபேறுகளை வெளியிட முடியாதிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார் .