ad

ஆசிரியர் - அதிபர் சம்பள முரன்பாடுகளை ஆராய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டது.



அசிரியர் அதிபர்களின் சம்பள முரன்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்றினை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையினால் அமைச்சர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. 

அமைச்சர்களான டலஸ் அலகப்பெரும, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, மஹிந்த அமரவீர, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் குறித்த குழுவுக்காக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அவர்களின் தலைமையில் நேற்று இரவு ஒன்றுகூட்டப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த அமைச்சர்களின் குழு நியமிக்கப்பட்டது. 

ஆசிரியர்கள், அதிபர்களின் சம்பள முரன்பாடானது 24 வருடங்களாக நிலவிவருவதுடன் இன்று வரை அது தீர்க்கப்டாத நிலையில் ஆசிரியர் அதிபர்கள் தொழிற் சங்க நடவடிக்கையில ஈடுபட்டுவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.