ad

How to Become A Railway Station Master-- in Tamil

புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி என்பவர் யார்?

இலங்கை புகையிரதத் திணைக்ளத்தின் கீழ் இயங்குகின்ற புகையிரத நிலையங்களில் புகையிரத சேவைகள் ஆணையாளரின் பிரதிநிதியாக செயற்படுகின்றவர் புகையிரத நிலையப் பெறுப்பாளராவர். இவர் புகையிர சேவை ஆணையாளரால் விதிக்கப்படுகின்ற மனித வள முகாமை, நிதி மற்றும் நிறுவன நடவடிக்கைகள், இணைப்புச் செயற்பாடுகள், ஒருங்கமைத்தல், செயற்பாடுகள், பயணச் சீட்டுகள் மற்றும் கணக்குகள் பேணுதல் போன்ற செயற்பாடுகளைக் கண்காணிக்கின்ற பொறுப்புக்களை ஏற்கின்றார். இவரது தலைமையிலே புகையிரத நிலையத்தின் அனைத்து பணிகளும் நடைபெறுகின்றது. 
புகையிரத நிலையப் பெறுப்பதிகாரியாக ஆரம்ப மட்டப் பதவிகளில் இணைகின்றவர்கள் டிக்கட் வழங்குதல், கணக்குப் பேணுதல், என்ற அடிப்படையில் பிரதான நிலையப் பொறுப்பதிகாரி வழங்குகின்ற பணிகளை மேற்கொள்ளவேண்டும். 

புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி சேவைக்காக ஆட்கள் எந்த அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்?

பொதுவாக புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி சேவைக்கு வருடா வருடம் ஆட்கள் சேர்க்கப்படுவதில்லை. எனினும்  நிலவுகின்ற வெற்றிடங்களின் அடிப்படையில் அவ்வப்போது ஆட்கள் சேர்க்கப்படுவதுண்டு. குறித்த சேவைக்கான ஆட் சேர்ப்பு 

01. திறந்த போட்டிப்பரீட்சை அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்தல்
02 மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்தல் 

என்ற அடிப்படையில்  ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். 


01. திறந்த போட்டிப் பரீட்சை அடிப்படையில்  


குறித்த பதவிக்காக குறிப்பிட்ட ஏதாவது ஒரு சேவையில் இத்தனை காலம் சேவையாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லாமல் உரிய கல்வித் தகுதிகளை பெற்றுள்ளவர்கள் திறந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.  எனினும் அவர்களின் வயதெல்லை மிகக் குறுகியதாக இருக்கும் . 

 பொதுவான பதவியணியின் கீழ் மாத்திரமே திறந்த போட்டுப் பரீட்சையின் அடிப்படையில் தொரிவு செய்யப்படுகின்றர்.  இந்தப் பதவிகளுக்காக ஆண்கள் மாத்திரமே தெரிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 

02. மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை

புகையிரத திணைக்களத்தின் ஆரம்பமட்ட சேவைகளில்  இருக்கின்றவர்களுக்கு இந்த சேவையில் இணைவதற்காக அதிக சந்தர்ப்பம் வழங்கும் அடிப்படையில் குறிப்பிட்ட காலம் சேவை அனுபவம் இருக்கின்ற அதே நேரம் போதுமான கல்வித் தகுதகளையும் பெற்றவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மூலமாக தெரிவு செய்யப்படுவர். 



வருடத்தில் எத்தனை பதவி வெற்றிடங்கள் உருவாகின்றன.

இந்த சேவையிலிருந்து  ஓய்வு பெறுகின்றவர்கள் மற்றும் சேவைக்காலத்தில் மரணிக்கின்றவர்கள் சேவையினை விட்டுச் செல்கின்றவர்கள் என வெற்றிடமாகும் பதவிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றிடங்கள் உருவாகின்றன. 

ஒவ்வொரு வருடமும்  வெற்றிடமாகின்ற பதவிகளின் எண்ணிக்கைக்கு ஆட்கள் சேர்க்கப்படுகின்றனர். 

புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி சேவைக்காக சேவையின் சம்பள அளவு என்ன? 

இலங்கை நிர்வாக சேவையின் சம்பள திட்டமாக 34,130 - 5 x 495 - 5 x 240 - 11x575 - 10x720 - 10 x 745 - ரூபா 54,130. என்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.
புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி சேவையில் முதலாவது நியமனம் பெறுகின்ற ஒருவர்

ஆரம்ப சம்பளம் - 34,130.00
வா.செ. கொடுப்பனவு 7,800.00
வேறு கொடுப்பனவு 2,500.00


என மொத்த சம்பளமாக 44,435 ரூபா கிடைக்கப்பெறும். 
இதில் ஆரம்ப சம்பளத்தில் 6% விதவைகள் தபூதாரர் அனாதைகள் நிதியத்திற்கு கழிக்கப்படும்.

அத்துடன் சம்பளத்தைப் போன்று மேலதிகக் கொடுப்பனவுகளுக்கும் கிடைக்பெறும்

இவைதவிர புகையிரதப் பயணங்கள் அனைத்தும் இலவசமாக மேற்கொள்ள முடியும். அத்துடன் குடும்பத்தவர்களுக்கு வருடத்தில் 6 தொகுதி 1 ஆம் வகுப்பு புகையிர ஆணைச்சீட்டு வழங்கப்படும்.  ஒரு தொகுதி எனபது பயணிக்கின்ற ஒவ்வொருவருக்கும் செல்வதற்கும் திரும்புவதற்குமான இரண்டு டிக்கபட்டுகளாகும். 

விண்ணப்பங்கள் எவ்வாறு கோரப்படுகின்றன?

பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பப்படிவ்களும் பரீட்சைக்கான நிபந்தனைகளும் அரச வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரசுரிக்கப்படும். அத்துடன் இணையத்தளத்திலும் பிரசுரிக்கப்படும்.

பரீட்சைக்கான வயதெல்லை என்ன?

 
  • திறந்த போட்டிப் பரீட்சைக்காக விண்ணப்பம் கோரப்படும் திகதிக்கு  18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் 30 வயதிலும் குறைந்தவர்களாக இருக்கவேண்டும்.

திறந்த போட்டிப் பரீட்சைக்கான  தகைமை என்ன?

கல்வித் தகைமை

அ) கல்விப் பொதுத் தராதரப்பத்திர (சாதாரண தரம்) பரீட்சையில் முதல் மொழியாக சிங்களம்/தமிழ் மொழி ஆகிய பாடங்களுள் ஒரு பாடத்தினையும், 
கணிதம் உள்ளடங்கலாக ஆகக்குறைந்தது நான்கு (4) பாடங் களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (6) பாடங் களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் ;

அத்துடன்

 (ஆ) கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் (பொதுப் பரீட்சை  மற்றும் ஆங்கில மொழி தவிர)ஒரே அமர்வில்  சித்திபெற்றிருத்தல்.  பழைய பாடத்திட்டத்தின்  கீழ் மூன்று (3) பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருப்பது போதுமானது.


உடற்தகைமைகள்


(i) சகல விண்ணப்பதாரிகளும் இலங்கையின் எப்பிரதேசத்திலும் சேவை புரிவதற்கான சிறந்த உடற் தகுதிகளையும் பெற்றிருத்தல் வேண்டும்.
(ii) பதவியின் கடமைகளை மேற்கொள்ளக் கூடியளவுக்கு போதுமான உடற் தகுதிகளையும் உளத் தகுதியையும் கொண்டிருத்தல் வேண்டும்.
(iii) உயரம் 05 அடி 04 அங்குலத்திற்கு குறையாமலும், நெஞ்சளவு 32 அங்குலத்திற்கு குறையாமலும் இருத்தல் வேண்டும்.
(iv) 6/ 6 அளவுள்ள கண்பார்வை பரிசோதனையிலும் தகுதி பெறல் வேண்டும்.

வேறு தகைமைகள்

(i) இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்.
(ii) விண்ணப்பதாரி சிறந்த குணநலமுடையவராக இருத்தல் வேண்டும்.
(iii) ஆண் விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.


திறந்த போட்டிப் பரீட்சை அடிப்படையில் ஆட்கள் தேர்தெடுக்கும் முறை

ஒவ்வொரு பாடத்திலும் தகுதி பெறுவதற்காக 50 % புள்ளிகள் வீதம் அல்லது அதற்கு மேல் பெற்றிருத்தல் வேண்டும். இப்பரீட்சையில் இரு விடயங்களிலும் கூடிய புள்ளிகளை பெற்று சித்தி பெறும் விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சைககு அழைத்து தராதரங்கள் பரிசீலனை செய்யப்படும். இந்நேர்முகப்பரீட்சையின் போது புள்ளிகள் ஏதும் வழங்கப்படமாட்டாது. விண்ணப்பம் கோரப்பட்ட சந்தர்ப்பத்தில் நிலவிய வெற்றிட தொகைக்கு ஏற்ப புகையிரத நிலைய அதிபர் - ஐஐஐ ஆம் வகுப்பின் பதவிக்கு நியமிக்கப்படுவர். நியமிப்பு செய்வதற்காக விண்ணப்பதாரிகளை தேர்ந்தெடுப்பது மேலுள்ள 06 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காரணிகளின்படி பரீட்சையில் கூடிய புள்ளிகளை பெற்றுள்ள திறமையின் வரிசைப்படியாகும்.

எழுத்துப் பரீட்சையின் கட்டமைப்பு எவ்வாறு அமைந்திருக்கும்?

(i) இப் பரீட்சை பரீட்சைகள் ஆணையாளரினால் நடாத்தப்படும்.

(ii) பரீட்சை முறை.-


 (அ) பரீட்சை சிங்களம், தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் நடாத்தப்படும்.

(ஆ) சகல வினாப்பத்திரங்களுக்கும் உரிய கல்வித் தகைமையினை பெற்றுள்ள  மொழி மூலமே தோற்ற வேண்டும். தேர்ந்தெடுத்தமொழி மூலத்தை பின்பு மாற்றம் செய்வதற்கு இடமளிக்கப்படாது.

(iii) பரீட்சைக்கான பாடங்கள்  

 (அ) மொழித்தேர்ச்சி
 (ஆ) நுண்ணறிவு


பாடங்களின் உள்ளடக்கம்


 (அ) மொழித்தேர்ச்சி

 காலம் : 01 மணி 30 நிமிடம் முழுப் புள்ளி 100 ஆகும்.

 இக் கேள்வித்தாள் இரு பிரிவுகளை கொண்டுள்ளதுடன் ஒவ்வொரு பிரிவுக்கும் சமமான புள்ளிகள் வழங்கப்படும். சகல கேள்விகளுக்கும் விடையளித்தல் வேண்டும்.எழுத்து மூலப்பரீட்சையில் தகைமை பெறுவோர் வாய்மொழிப் பரீட்சைக்காக அழைக்கப்படுவர்.  இரண்டு பரீட்சைகளிலும் அதிக புள்ளி பெறுகின்றவர்கள் தெரிவு செய்யப்படுவர். அதனை அடுத்து வாய்மொழிப் பரீட்சை இடம் பெற்று இவை இரண்டிலும் பெறுகின்ற புள்ளிகளின் அடிப்படையில் நியமிக்கப்படுவர். 

i. ஆம் பிரிவு .-
 இப்பிரிவில் கட்டுரையும் சுருக்கமும் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

ii. ஆம் பிரிவு .-
 மொழி பற்றி விண்ணப்பதாரியின் புரிந்து கொள்ளுதலை பரிசீலிக்கும் பொருட்டு அம்சங்கள் பலவற்றைக் கொண்டு இரண்டாம் பிரிவு உள்ளடக்கப்பட்டிருக்கும். இவ்வம்சங்கள் வாயிலாக கீழ் கோடிடப்பட்டுள்ள சொற்களின் கருத்தை தனி வாக்கியத்தில் கூறுமாறு அல்லது அது பற்றி விரிவான குறிப்பு எழுதுமாறு அல்லது வழங்கப்பட்டுள்ள கேள்விக்கு தரப்பட்டுள்ள விடைகளின் மத்தியில் மிகச்சரியான விடையை தேர்ந்தெடுக்குமாறு விண்ணப்பதாரிகள் வேண்டப்படுவார்கள்.

 (ஆ) நுண்ணறிவு.-

 காலம் : 01 மணி 30 நிமிடம் முழுப் புள்ளி 100 ஆகும்.

 விண்ணப்பதாரியின் தர்க்க ரீதியான ஆற்றலையும் விவரிக்கும் ஆற்றலையும் சரியான தீர்மானம் எடுக்கும் ஆற்றலையும் புத்திக்கூர்மையையும் அளவிடும் வகையில் இக்கேள்வித் தாள் அமையப் பெற்றிருக்கும்.

பல்வித மற்றும் சுருக்க விடையளித்தல் அமைப்பில் 50 கேள்விகளை உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் சகல கேள்விகளுக்கும் விடையளித்தல் வேண்டும்.

எழுத்துப் பரீட்சையின் பின்னர்


இந்தப் பரீட்சையின் பின்னர் 
01. நேர்முகப் பரீட்சை ஒன்று நடாத்தப்படும்
02 அதன் பின்னர் வைத்தியப் பரிசோதனை நடாத்தப்படும்
03. அத்துடன் இரண்டு கண் பரிசோதனைகள் நடாத்தப்படும். (சாதாரண கண் பரிசோதனை மற்றும் வர்ண வேறுபாடுகள் குறித்த பரிசோதனைகள்.)

இதன் பின்னர் நியமனம் வழங்கப்படும். 


நியமனம் பெற்றதன் பின்னரான நடவடிக்கைகள்

ஆரம்ப கட்டமாக ஆரம்பத் தகைமை பூர்த்தி செய்தமைக்காக சம்ர்ப்பிக்கப்பட்ட க.பொ.த (சா/த) மற்றும் (உ/த) பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்பி அவை சரியானதா என்பது உறுதி செய்யப்படும். 

அதன் பின்னர் முதல்   3 வருடங்கள் தகுதிகாண் காலமாக கருதப்படும். 

இந்த தகுதிகாண் காலப்பகுதியில் உரிய அடிப்படையில் பணியாற்ற வேண்டும். இந்தக் காலப்பகுதியில் சட்டத்திற்கு முரணான எந்த நடவடிக்ைககளையும் மேற்கொள்ளலாகாது. அவ்வாறானவர்கள் 3 வருடங்களின் பின்னர் நியமனம் நிரந்தரமாக்கும் தகுதியினைப் பெறுவார்கள். அவ்வாறு நியமன் உறுதி செய்யப்படுவதற்காக உள்ளகப் பரிட்சை ஒன்றையும் சித்தியடைய வேண்டும். 

தகுதிகாண் காலப்பகுதியில் முதலாவது தடை தாண்டல் பரீட்சை

இந்தப் பரீட்சையானது தாபன விதிக் கேவையையும் நிதிப்பிரமானத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமைவதுண்டு.

இது தவிர புகையிர பறிற்சி நிலையத்தின் பயிற்சிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும். 

01. புகையிரத பாதுகபப்புச் சட்டம்
02. வாணிப விதிமுறைகள்
03. கணக்கீட்டுப் பணிகள்
04. Block சட்டங்கள்.
05.புகையிரத நிலைய முகாமை
06. பிகையிரத திணைக்ளத்தின் நிறுவன அறிவுறுத்தல்கள்
07. பிகையிரத கட்டளைச் சட்டம்.
08. ஆங்கிலம், தமிழ் அல்லது சிங்களம்
09. கணனி பயிற்சி
10 முதலுதவி பயிற்சி
11. தீயணைத்தல் பயிற்சி

போன்றன முறையாக பயிற்சியளிக்கப்படுகின்றது. அதன்பின்னர் மேற்படி பாடங்களில் வெவ்வேறாக பரீட்சை நடாத்தப்படுதம். இந்தப் பரீட்சைகளை இரண்டு தடவைகளுக்கு மேற்படாத அடிப்படையில் சித்தியடைய வேண்டும். அவ்வாறு சித்தியடையும் போது பதவி நிரந்தரமாக்கபடுகின்றது. 

க.பொ.த உயர் தரம் படித்து மேற்படி சித்திகளைப் பெற்றிருப்பவர்கள் இந்தப் பதவிக்காக விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்காக 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி வர்த்தமானியில் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. அடுத்த பதிவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் 2022 ஆம் ஆண்டளவில் கோரப்படலாம். அது வரையில் இந்தப் பதவி குறித்து புரிந்துகொண்டு பரீட்சைகளுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளலாம். 

lankajobinfo.com