ad

அதிகமான மக்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க ஜனாதிபதி திட்டம்.


இலங்கையின் மொத்த சனததொகையில் அதிகளவானவர்களுக்கு செப்தம்பர் மாத்திற்கு முன்னர் தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அவர்கள் திட்டமிட்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  

அதன் அடிப்படையில் நோய்பரவல் அதிகமாகக் காணப்படுக்கினற மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குகின்ற அடிப்படையில் ஜூலை மாதத்தில் கிடைக்கினற தடுப்பூசிகள் மக்களுக்கு விநியோகிகப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது. 

அதன் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்திற்கு 200,000 தடுப்பூசிகளும், கம்பஹா மாவட்டத்திற்கு 500,000 தடுப்பூசிகளும், களுத்துறை மாவட்டத்திற்கு 300,000 தடுப்பூசிகளும் ஒதுக்கப்படுகின்றது. அத்துடன் மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு கூடிய அனைவருக்கும் இந்த மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் தடுப்பூசி வழங்கப்படவேண்டும் என்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதற்காக ஜூலை 11 ஆம் திகதி கிடைக்கவிருக்கின்ற 2 மில்லியன் சைனோஃபாம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவிருக்கின்றது. 

இன்று (9) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கொவுட் தடுப்புக்கான விசேட குழுக் கூட்டத்தின்போதே மேற்படி குறிப்பிடப்பட்டது. 

அத்துடன் காலி, மாத்தறை, அனுராதபுரம், நுவரெலியா, இரத்னபுரி, பதுள்ளை, மாத்தளை போன்ற மாவட்டங்களுக்கும் தலா ஒரு இலட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. 

மேலும் தற்போது கிடைத்திருக்கின்ற ஃபைசர் தடுப்பூசி மன்னார, வவுனியா ஆகிய மவட்ட மக்களுக்கும் மொடர்னா தடுப்பூசியை கண்டி மாவட்ட மக்களுக்கும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பரிவு தெரிவித்திருக்கின்றது.