ad

ஆசிரியர்கள் மாணவர்களிடம் பழி தீர்த்துக் கொள்வதனை அனுமதிக்க முடியாது. பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்.



  ஆசிரியர்கள் தங்களது பிரச்சினைகளை முன்வைத்து அப்பாவி மாணவர்களிடம் பழி தீர்த்துக்கொள்வதனை அனுமதிக்க முடியாது என்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்தார் .

காலி அங்குலுகஹ வித்தியாலத்தில் இன்று (14) கனனி நிலையம் ஒன்றை வழங்குகின்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரச்சினைகள் காணப்படுமாயின் அவை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல் கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து விலகும் போது அதன் ஊடாக மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர் என்பதனால் இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதாக குறிப்பிட்டார்.

தடுப்பூசி வழங்குகின்ற செயற்பாடு முடிவடைந்ததும் அவசரமாக பாடசாலைகளை ஆரம்பிப்பதே  அரசாங்கத்தின் திட்டமிட்டமாகும். எனினும் அதற்கு முன்னர் தற்போது கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது ஒன்லைன் முறையிலான செயற்பாடுகளில் பிரவேசம் தொடர்பில்  காணப்படுகின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நாடு முழுவதும் 2096 வந்த மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

-அருண-