ad

கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகள்




சுமார் ஐம்பத்தொரு கோடி ரூபாய் செலவில் கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்குவதற்கு கல்வி மறுசீரமைப்பு மற்றும் தெலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு தீர்மானித்திருக்கின்றது. 

இந்தத் திட்டத்தின் கீழ் 7373 பாடசலைகளுக்காக 5127 தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது. மாணவர் எண்ணிக்கை 100 இலும்  குறைந்த பாடசாலைகளுக்கு ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் 100 முதல் 200 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு 2 தொலைக்காட்சிப்பெட்டிகளும் வழங்கப்படவிருக்கின்றது. 

இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கின்ற இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 4092 பாடசாலைகயுக்கு 5945 தொலைக்கபட்சிப்பெட்டிகளும் இரண்டாவது கட்டத்தில் 1035 பாடசாலைகளுக்கு 1428  தொலைகாட்சிப் பெட்டிகளும் வழங்குவதற்கு அமைச்சிலிருந்து ஒருவர்  தீர்மானிதத்திருப்பதாக நேற்று (08) அருண விற்கு தெரிவித்திருந்தார்.

முதல் கட்டத்திற்காக  41 கோடியே 60 இலட்சம் ரூபாவும் இரணய்டாவது கட்டத்திற்காக 10 கோடி ரூபாவும் செலவிடப்படவுள்ளது என்பதாகக் குறிப்பிடப்பட்டது. 

முதலாவது கட்டத்தில் மத்திய மாகாணத்தனி் 632 பாடசாலைகள், கிழக்கு மாகாணத்தில் 340 பாடசாலைகள், தென் மாகாணத்தில் 466 பாடசாலைகள், மேல் மாகாணத்தில் 402 பாடசாலைகள்,, வடமேல் மாகாணத்தில் 567 பாடசாலைகள், வட மத்திய மாகாணத்தில் 391 பாடசாலைகள், ஊவா மாகாணத்தில் 475 பாடசாலைகள், சபரகமுவ மாகாணத்தில் 495 பாடசாலைகள்  வட மாகாணத்தில் 322 பாடசலைகள் என இந்த திட்டத்திற்காக பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.