ad

பத்தாவது நாளாக ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் - அவசரமாக சம்பளத்தை அதிகரிக்க முடியாது - அமைச்சர் பந்துல குணவர்தன




சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் - அதிபர் தொழிற் சங்கங்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன. 

அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் கடந்த 10 தினங்களாக ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருக்கின்றர். 

குறித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தமது  தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடரும் என்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று (21) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் ஆசிரியர் சங்கங்கள் கேட்பதற்கு அமைய அவசரமாக சம்பளங்களை அதிகரிக்க முடியாது என்பதாக  வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார் 

இந்த நிலையில் நேற்று கல்வி அமைச்சருக்கும் ஆசிரியர் சங்களுக்கும் இடையிலான பேச்சுவார்தையின் போது சம்பள ஏற்றம் குறித்த முன்மொழிவுவொன்றை அடுத்த வாரம்  அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கவிருப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்திருந்த நிலையிலேயே வரத்தக அமைச்சர் சம்மள அதிகரிப்பபை அவசரமாக வழங்க முடியாது என்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.