வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டிருக்கின்ற ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்கும் கல்வி அமைச்சர் பேசாரியர் ஜீ.எல் பீரிஸ் அவர்களுக்கும் இடையே நாளை (20 ஆம் திகதி) பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போதுதங்களது கோரிக்கைகளுக்கு ஏற்றுக்கொள்ளமுடியுமான அடிப்படையிலான தீர்வுகள் கிடைக்காவிடின் தற்போதைக்கு மேற்கொள்ளப்படுகின்ற வேலைநிறுத்தத்திற்கு மேலதிகமாக இம்மாதம் 22 ஆம் திகதி தொழிற் சங்க நடவடுக்கைகளில் ஈடுபடுவதற்கு தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்திருக்கின்றது.
கொதலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தினை இரத்துச் செய்தல், பல வருடங்களாகக் காணப்படுகின்ற ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுகளைத் தீர்த்தல், அரசாங்கத்தின் அடக்குமுறையான நடவடிக்கைகளை நிறுத்துதல் போன்ற கோரிக்கைகளை மேற்படி கூட்டமைப்பு கல்வி அமைச்சிடம் முன்வைத்திருக்கின்றது. இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை (20 ஆம் திகதி) கல்வி அமைச்சுக்கு சமூகம் தருமாறு தொழிற்சங்க கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட தான் உட்பட ஏனைய அங்கத்தவர்கள் விடுவிக்கப்பட்டதுடன் தொழிற்சங்க நடவடிக்கைகள் முற்றுப்பெறுவதில்லை என்பதாகவும் தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாதவிடத்து கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் பிரதான செயலாளர் குறிப்பிட்டார. கல்வி அமைச்சர் பதவியை ஏற்றதன் பின்னர் முதல் தடவையாகவே தங்களுடன் கலந்துரையாடுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நேற்று (18) தொழிற்சங்களின் கூட்டமைப்பினால் கொழுப்பு 2 குரு மெதுர மண்டபத்தில் நாடத்தப்பட்ட ஊடக சந்திப்பின் போதே மேற்படி கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
நிலன்த மதுராவல - அருண