ad

இலஞ்சம் பெற்றுக் கொள்ள முயன்ற காணி உத்தியோகத்தர் - வெளிக்கள உத்தியோகத்தர் கைது



மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரத்திற்கு பரிந்துரை வழங்குவதற்காக வியாபாரி ஒருவரிடமிருந்து 150,000.00 ரூபா இலஞ்சம் கேட்டுப் பெற்றுக்கொண்டதாக குறிப்பிடப்படும்  பொத்துவில் பிரதேச செயலகக் காரியாலயத்தின் காணி உத்தியோத்தர் ஒருவரும் வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவரும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


சந்தேக நபர்கள் இருவரும் குறித்த வியாபாரியிடம் மூன்று இலட்சம் ரூபா இலஞ்சமாக கேட்கதாகவும் பின்னர் பேரம் பேசி இரண்டு இட்மாககக் குறைத்து அதில் 50 ஆயிரம் ரூபாவை ஆரம்த்தில் பெற்றுக்கொண்டிருந்ததாக முறைப்பாட்டாளர் குறிப்பிட்தாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது.


பின்னர் மீதீத் தொகையான ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை பெற்றுக்கொள்வதற்காக சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (16) பொத்துவில் பகுதிக்கு சென்றபோதே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக ஆணைக்குழூ தெரிவித்தது.


சந்தேக நபர்கள் பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

நிமந்தி ரணசிங்க- லங்காதீப