படைப்பாற்றல் மிக்க ஆசிரியர்களுக்கு அழைப்பு
விண்ணப்ப முடிவுத்திகதி 2021.08.20-
தற்போதிருக்கும் தொற்றுநோய் நிலைமை காரணமாக ஏற்பட்டிருக்கும் பிரயோக ரீதியான கஷ்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு “தொலைக் கல்விக்குரிய இ–கற்றல் உள்ளடக்கங்களை தயாரித்தல் மற்றும் முன்வைப்பதற்காக அரச பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களைக் கொண்ட தேசிய மட்டத்திலான விடயம் சார் வளவாளர் குழாம் ஒன்றை தாபித்தல்” இற்கான விண்ணப்ப முடிவுத் திகதி 2021 ஆகஸ்ட் மாதம் 20 ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதை தயவுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக் கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
'தொலைக் கல்விக்குரிய இ-கற்றல் உள்ளடக்கங்களை தயாரித்தல் மற்றும் முன்வைத்தலுக்காக அரச பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களைக் கொண்ட தேசிய மட்டத்திலான விடயம் சார் வளவாளர் குழாம் ஒன்றினை நிறுவுதல்.
01.தரம் 1 முதல் 13 வரையான யூடியூப் ஊடாக கற்பிக்கப்படும் பாடங்களின் உள்ளடக்கம் தயாரித்தல்
(அ) திரை வசனப் பிரதி எழுதுதல்
(ஆ) முன்வைத்தல்
02. தரம் 1 முதல் 13 வரையான பாடங்களின் பாட உள்ளடக்கம் தயாரித்தல்
அ) போதனாவியல் வடிவமைப்பு
(ஆ) உள்ளடக்க வடிவமைப்பு
03. சகல பாடங்களுக்குமான வினா வங்கி தயாரித்ல்
04. கற்றல் உள்ளடக்க மெனபொருள் தயாரித்தல்
மூலம் - தினகரன்.