சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான பரீட்சைகள் இலங்கைப் பரீட்சைத் திணைக்ளத்தினால் பொதுவான ஒரு தினத்தில் நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அலககோன் நேற்று (13) அருண பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார்.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் தலைமைக் காரியாலயம் மற்றும் மாவட்டக் காரியங்களில் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற இந்த பரீடசைகள், கட்டம் கட்டமாக நடத்தப்படுவதனால் கிடைக்கப்பெற்ற விமர்சனங்களின் விளைவாக இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ள நேர்ந்தாக ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக வாராந்தம் நடாத்தப்படுகின்ற பரீட்சைகள் மாதம் ஒரு முறை நாடுமுழுவதும் ஒரே தினத்தில் நாடாத்த முடிவதாகக் குறிப்பிட்டார்.
இந்தப் பரீட்சைக்கான வினாப்பத்திரம் குறித்தும் பல வகையான விமர்சனங்கள் காணப்படுவதாகவும் வினாத்தாளில் மாற்றம் ஏற்படுவத்துவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான காரியாலம மற்றும் நாராஹேன்பிட காரியாலயம் என்பவற்றினால் செயற்படுத்தப்படுகின்ற முன்கூட்டியே நேரம் ஒதுக்கிக்கொள்ள முடியுமான சேவையானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து மாவட்டக் காரியாலங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாகவும் இதற்கான தொழிநுட்ப உதயினை சிறீலங்கா டெலிகொம் நிறுவனம் வழங்குவதாகவும் குறிப்பிட்டார
F. அஸ்லம் - அருண