பெண் வைத்தியர் ஒருவர் தனது தங்குமிடத்தில் உடை மாற்றும் போது அதனைத் தனது கைத்தொலைபேசியல் படம் எடுத்த வைத்தயர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக ரhகமைப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 10 ஆம் திகதி வைத்தியசாலைப் பணிகளை நிறைவு செய்துவிட்டு இரவு 8 மணியளவில் தனது தங்குமிடத்தில் உடை மாற்றிக்கொண்டிருந்த பெண் வைத்தியரை இன்னுமொரு வைத்தியர் படம் எடுத்துள்ளார் என்பதாக ராகம் பொலிசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வைத்தியர் கைதுசெய்ப்பட்டுள்ளார்
குறித்த வைத்தியர் கொழும்பு தேசிய வைத்திய சாலையைச் சேர்ந்தவர் என்பதாகவும் சம்மாந்துரைப் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பதாகப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கைதுசெய்யப்பட்ட வைத்தியர் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்நிறுத்தப்பட்டதுடன் சம்பவத்துடன் தொடர்பான மேலதிக விசாரணைகள் ராகம பொலிசாரினால் மேற்கொள்ளப்படுகின்றன.
பிரசங்க பாலுஹேவா - கட்டுநாயக்க - அருண.