ad

ஆசிரியர்கள் நாளை முதல் ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொள்ள தீர்மானம்.



நாளை முதல் ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கன்  நீங்கவிருப்பதாக ஆசிரியர் சங்கத்தினர குறிப்பிடுகின்றனர்.

தமது தொழில் துறை சார்ந்தவர்களை  சட்டவிரோதமாக தடுத்து வைத்திருப்பது இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்வதற்கான காரணமாகும் என ஆசிரியர் சங்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளில் இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், அகில இலங்கை ஆசிரியர் சங்கம் , ஐக்கிய ஆசிரியர் சங்கம் , இலங்கை அதிபர் சங்கம்  உட்பட 14 ஆசிரியர் தொழிற் சங்கங்கள் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது .

கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் புதிய சட்ட மூலத்திற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட தொழிற்சங்க அங்கத்தவர்கள் தற்போது முல்லைத்தீவு தனிமைப்படுத்த நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர் 

எவ்வாறாயினும் மேற்படி காரணங்களை முன்வைத்து நாளை (12) முதல் ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகிக்கொள்வதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் புதிய சட்டமூலம் குறித்து தெரிந்துகொள்ள இந்த லிங்கில் கிளிக் செய்யவும்