தேசிய பாடசாலைகள், கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகள், ஆசிரியர் மத்திய நிலையங்கள் என்பவற்றில் பணியாற்றுகின்ற கல்வி சாரா உத்தியோகத்தர்களுக்கான கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவித்தல்
தங்களது நிரந்தர சேவைத்தளத்திலிருந்து வேறு சேவைத்தளங்களுக்கு தற்காலிக இடமாற்றம் பெற்றிருக்கின்ற கல்வி சாரா உத்தியோகத்தர்கள், உரிய நிறுவனங்கள் மீண்டும் ஆரம்பிக்கும் வரை இடமாற்றம் பெற்றிருக்கின்ற சேவைத் தளத்திலேயே பணிபுரிபவர்களாகக் கருதப்படுவர். அது வரையில் அவர்களது தற்காலிக இடமாற்றத் திகதி நீடிக்கப்பட்டதாகக் கருதப்படும்.
தங்களது நிரந்தர சேவைத்தளம் மீளத் திறக்கப்பட்டதும் குறித்த சேவைத்தளத்தில் சேவைக்கு சமூகமளிக்க வேண்டும். தற்காலிக இடமாற்றத்தினை மேலும் நீடிக்கவேண்டுமாயின் நிரந்தர சேவைத்தளத்தின் நிறுவனத் தலைவர் பரிந்துரையுடன் நிறுவனத் சிரேஷ்ட உதவிச் செயலாளருக்கி (இணைந்த சேவைகள் அல்லாத) விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். நிரந்த சேவைத்தளத்தின் நிறுவனத் தலைவரின் பரிந்துரை இல்லாமல் சமர்ப்பிக்கப்டுகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
02 தற்போது காணப்படுகின்ற கொவிட் நிலைமையில் அரசாங்கம் வௌியிட்டுருக்கின்ற சுகாதார நடைமுறைகளுக்கு அமை சேவை அவசிப்பாடு காரணமாக சேவையில் ஈடுபடுத்துவதற்கான அதிகாரம் நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.