
முதல் கட்டமாக 100 இலும் குறைந்த மாணவர் எண்ணிக்கையினைக் கொண்ட பாடசலைகளை ஜூலை மாத்தினுல் மீளத் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படிவதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் 2021.07.02 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் மநாட்டில் தெரிவித்தார்.

இதற்காக ஆசிரியர்களுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிகை கட்டாயமாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பதாக ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டதாகவும், 50 இலும் குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட 1439 பாடசாலைகளும் 51 தொடக்கம் 100 வரையான மாணவர்ளைக் கொண்ட 1523 பாடசாலைகள் என்ற அடிப்படையில் மொத்தம் 2962 பாடசாலைகளை முதல் கட்டமாக ஜூலை மாதத்தில் ஆரம்பிப்பதற்குநடைவடிக்கை எடுக்கபடுவதுடன், ஏனைய பாடசாலைகளை உரிய திட்டமிடலுடன் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுதாகவும் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் ஆரம்ப கட்டமாக அனைத்து ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் ஏனைய அலுவலர்களுக்கும் தடுப்பூசி வழங்குவதன் ஊடாக பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பி வைப்பது தொடர்பில் பெற்றோர்களுக்கு நம்பிக்கையினை ஏற்படுத்த முடிவதாகக் குறிப்பிட்டார்.
குறித்த ஊடகச் சந்திப்பின்போது இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கருத்துத் தெரிவிக்கையில்
பாடப்புத்தகங்கள், குறிப்புகள், செயலட்டைகள் என்பன மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், அவைகளை அதிபர்கள் ஊடாக மாணவர்களுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டார். அத்துடன் ஐ அலைவரிசை மற்றும் நேத்ரதிரா டீ.வி போன்ற தொலைக்காட்சி அலைவரிசைகளில் பி.ப 4.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை வகுப்புக்கள் மற்றும் பாடங்கள் என்ற அடிப்படையில் கல்வி நிகழ்சிகள் நடாத்தப்படுகின்றன. இவற்றுக்கு மேலதிகமாக ஒவ்வவொரு வகுப்புக்களுக்கும் வெவ்வேறான அடிப்படையில் சட்டலைட் தொலைக்காட்சி அலைவரிசைகளை ஆரம்பிப்பதற்கும் அவற்றின் ஊடாக தகுதியான ஆசிரியர்களின் மூலமாக நேரடியாக கல்வி புகட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் வீட்டை அடிப்படையாகக் கொண்ட (House base ) கல்வி நடவடிக்கையினை மாணவர்களுக்கு வழங்குவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் இந்த நடவடிக்கையில் 5 ஆம் ஆண்டு 11 ஆம் ஆண்டு மற்றும் உயர் தர வகுப்பு மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவிருக்கின்றது.
ஆரம்பிக்கப்படவிருக்கின்ற கல்வி நிலையங்களுக்கு செல்வதில் கஷ்டப் பகுதிகளைச் நேர்ந்த மாணவர்களுக்கு போக்குவரத்துப் பிரச்சினைகள் காணப்படுமாயின் அதற்காக இலங்கைப் போக்குவரத்து சபையுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்தாக தெரிவித்தார். அத்துடன் இது தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதாரப் பரிசோதகர்கள், மற்றும் அதிபர்கள் போன்றவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பட்டார்.
lankajobinfo.com