ad

2021 ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சை பிற்போடப்படுமா?


ஒக்டோபர் மாதத்தில் நடைபெறவிருக்கின்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடாத்துதல் அல்லது பிற்போடுதல் குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டு அதன் அடிப்படையில் தீர்மானம் ஒன்றுக்கு வர இருப்பதாக கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்தார்.


பாராளுமன்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார் .


இந்த நிலையில் இந்த வருடம் க பொ த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியிருக்கின்ற மாணவர்களின் பிரயோகப் பயிற்சிகளை அவசரமாக நடத்தி முடிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். 


2020 ஆம் ஆண்டு சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளை வழங்க முடியாத நிலை காணப்படுகிறது. கீழைத்தேய மற்றும் மேலைத்தேய சங்கீதம் மற்றும் நாடகமும் அரங்கியலும் போன்ற பாடங்களுக்குரிய பிரயோக பரீட்சைகள் இன்னும் நடத்தாமையே இதற்கு காரணம் என்பதாக புத்திக பத்திரன குறிப்பிட்டார்.


இதற்கு பதிலளிக்கையில் பிரயோக பரீட்சைகளை முடிந்த அளவு அவசரமாக நடத்தி பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்