எதிர்வருகின்ற ஒக்டோபர் 3 ஆம் திகதி மற்றும் 4 ஆம் திகதி நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்ற தரம் 5 புலமைப் பரிசில் மற்றும் க.பொ.த (உ/த) பரீட்சைகளைப் பிற்போடுமாறு எதிர்க்ட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் வேண்டியுள்ளார்.
பரீட்சைத் தினங்களைப் பிற்போட்டு பாடத்திட்டத்தினைப் பூர்த்தி செய்வதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு தனது அறிக்கை ஊடாக தெரிவிக்கின்றார.
குறித்த இரண்டு மாணவர் பிரினரும் மன ரீதியிலான பாதிப்புக்கள் பலவற்றுக்கு உள்ளாகியிருக்கின்ற நிலையிலேயே பரீட்சைகள் நடாத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக் காட்டினார்.
கற்பித்தல் செயற்பாடு முழுமையாக நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்கள் அபகுவாகப் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர். 200 கடகு அதிகமான பாடசாலைகளின் மாணவர்களுக்கு ஒன்லைன் கற்பித்தல் முறயைில் கற்பதற்கான வசதிகள் காணப்படுவதில்லை என்பதாகவும். ஒன்லைன் கல்யினை நெறிப்படுத்துவதற்காக இந்த அரசாங்கம் இதுவரையில் எந்தவிதமான நடலடிக்ைகககளையும் மேற்கொள்ளவில்லை என்பதாகவம் தெரிவித்தார்.