கொரோனா நிலைமை காணப்பட்ட 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற 28 வேலை நிறுத்தங்கள் காரணமாக 22,590 மனித நாட்கள் விரயமாகியிருப்பதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிடுகின்றது.
ஒரு மனிதர் ஒரு நாளைக்கு புரிகின்ற வேலையின் அளவு மனித நாள் என்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.
குறித்த ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெற்ற 5 வேலை நிறுத்தங்கள் காரணணமாக 1480 மனித மணித்தியாலயங்களை நாடு இழந்திருக்கின்றது.
இரண்டாவது காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட 10 வேலை நிறுத்தங்களின் விளைவாக 4073 மனித நாட்களை விரயமாகியிருக்கின்றது என்பதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவது காலாண்டின் 11 வேலை நிறுத்தங்களின் ஊடாக 16505 மனித நாட்களும், நான்காவது காலாண்டில் நடைபெற்ற இரண்டு வேலை நிறுத்தஙக்ளினால் 478 மனித மனித்தியாலயங்கள் விரயமாகியிருக்கின்றது.
அத்துடன் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற 25 வேலை நிறுத்தங்களின் விலைவாக 56,502 மனித மணிதியாலயங்கள் விரயமாகியிருக்கின்றது.
சுஜித் ஹேவாஜூலிகே - லங்காதீப