04. கொவிட் 19 தொற்று நிலைமையால் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலங்களில் வீட்டுமட்ட செயற்பாடுகள் மூலம் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்:
கொவிட் 19 தொற்று நிலைமையால் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலங்களில் *ஈதக்சலாவ”, “குருகுலம்” தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள், தேசிய கல்வி நிறுவகத்தின் “யூ ரியூப்” அலைவரிசை மற்றும் மாகாண மட்டத்திலும் பாடசாலை மட்டத்திலும்:இணையவழியிலான பாடங்கள் போன்ற மாற்று வழிகள் மூலம் மாணவர்களுக்குக் கல்வியை
வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆயினும், பாடசாலைகள், அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் ஏனைய சிரேஷ்ட உத்தியோகத்தர்களை முழுமையாகப் பயன்படுத்தல், கற்பித்தல் செயன்முறையில் பொதுவான முறைகளைப் பேணல், மாணவர் பங்கேற்பு மட்டத்தை கணித்தல் மற்றும் கற்றல் தேர்ச்சியை மதிப்பிடல் தொடர்பாக நடைமுறை ரீதியான பிரச்சினைகள் தோன்றியுள்ளன. அதனால், குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வாக சுகாதார நடைமுறைகள் மற்றும் வழிகாட்டிகளைப் பின்பற்றி கல்வித் துறையிலுள்ள அனைத்து நிறுவனங்கள் மற்றும் மனித வளத்தை உயர்ந்தபட்சம் பயன்படுத்தி “வீட்டுமட்ட செயற்பாடுகள் மூலம் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்” எனும் பெயரில் கீழ்வரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டமொன்று 2021 ஆகஸ்ட்மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- ஒவ்வொரு தரத்திற்கும் எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளுடன் செயற்பாடுகளை நியமப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்
- ஆசிரியர்கள் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்
- ஆசிரியர்கள் வாராந்தம் பிள்ளைகளின் தேர்ச்சியை மதிப்பீடு செய்து மாணவர் தேர்ச்சி அறிக்கையைப் பேணல்
- பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் பெற்றார், மாணவர்களையும் இணைத்துக் கொண்டு வீட்டுமட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளல்
- ஆசிரிய ஆலோசகர்கள் ஆசிரியர் செயலாற்றுகை மதிப்பீடு மற்றும் ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்ளல்
- முன்மொழியப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்தை தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும், வலய மட்டத்திலும் செயற்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்குமான சிரேஷ்ட உத்தியோகத்தர்களுடன் கூடிய குழுவொன்றை நியமித்தல்