தரம் 1 முதல் 13 வரையான கல்வி நிகழ்ச்சிகள் உள்ளடிக்கிய 20 தொலைக்காட்சி அலைவரிசைகளை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக கபினட் பேச்சாளர் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்
இன்று (06) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்காக தொலைக்காட்சி ஊடாக இலவச கல்வியை வழங்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார் .
உயர்தர பாடப்பிரிவுகளில் தொழில்நுட்பவியல் ,உயிரியல் ,கணிதம், கலை என்ற அடிப்படையில் 4 தொலைக்காட்சி அலைவரிசைகள் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார்
குறித்த திட்டத்திற்கு அமைய பாடத் திட்டங்களின் அடிப்படையில் ஒலிப்பதிவு நடவடிக்கைகள் கல்வி அமைச்சில் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.