2022 ஆம் ஆண்டில் தரம் 01 இற்கு மாணவர்ளைச் சேர்ப்பதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று (19) தெரிவித்தார்.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி ஜூலை மாதம் 31 என்பதாக இருந்த போதிலும் கடந்த காலங்களில் காணப்பட்ட நாட்டு நிலைமை காரணமாக இறுதித் திகதி நீடிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்திருக்கின்ற பொது ஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார்.