அறிமுகம்.
கிராம சேவை உத்தியோகத்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டதன் பின்னர் எமது இணையத்தள வாசகர்களிமிருந்து எமக்குக் கிடைத்த கேள்விகளில் கீழ்க் குறிப்பிடப்படுகின்ற கேள்விகள் பிரதானமானவை..
01. எனக்கு ஒரே அமர்வில் நான்கு திறமைச் சித்திகள் உள்ளடங்கலாக 6 பாட சித்தி சாதாரண தரப் பரீட்சையில் இல்லை. நான் விண்ணப்பித்தால் தெரிவாக வாய்ப்பிருக்கின்றதா?
02. எனக்கு மொழிப்படத்தில் அல்லது கணிதப் பாடத்தில் திறமைச் சித்தி இல்லை எனவே எனது விண்ணப்பம் நிராகரிக்கபடுமா?
இந்தக் கேள்விகளுக்கு விடையாக இந்தப் பதவிக்கு தேவையான தகைமையினை நீங்கள் பெற்றுக்கொள்வில்லை என்றே பதில் சொல்ல வேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் அரச சேவை ஒன்றில் நுழைவதற்காக எதிர்பார்க்கின்றவர்களுக்கும் உதவியாக சில விடயங்களை இங்கு குறிப்பிடுகின்றோம்.
அரச தொழிலுக்கான கல்வித் தகைமையினைப் பெற்றுக்கொள்ளல்.
அரச சேவையின் ஆகக் குறைந்த தரமான காரியாலய உதவியாளர் பதவிக்கு சேர்வதாக இருந்தாலும் க.பொ.த (சா/த) பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத தடவைகளில் 2 திறமைச் சித்திகள் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருப்பது அடிப்படைத் தகைமையாகக் காணப்படுகின்றது.
இதுவே உயர் தரச் சித்தியுடனான ஒரு பதவிக்காகவெனில் க.பொ.த (சா/த) பரீட்சையில் ஒரே அமர்வில் கணிதம் மற்றும் மொழி உட்பட 4 திறமைச் சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தியடைந்திருப்பது அவசியமாகும். அத்துடன் உயர் தரப் பரீட்சையில் ஒரே தடவையில் 3 பாடங்களில் சித்தியடைந்திருப்பதுவும் அவசியமாகும்.
எனவே உயர் தரம் செய்துவிட்டு அரச வேலைவாய்பொன்றை எதிர்பார்க்கின்றவர்கள் போதுமான சாதாரண தரத் தகைமை இல்லையாயின் அடுத்த வருடங்களில் வருகின்ற பரீட்சைகளுக்கு முகம்கொடுத்து உரிய சித்திகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.
இங்கு உயர் தரப் பரீட்சை எழுதிய பின்னர் க.பொ.த (சா/த) பரீட்சை எழுதினால் ஏற்றுக்கொள்ளப்படுமா?
.. பொதுவாக விண்ணப்பம் கோரப்படுகின்ற திகத்திக்கு முன்னர் தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல் போதுமானது என்பதால் பரீட்சை பெறுபேறுகள் அந்தத் திகதிக்கு முன்னர் செல்லுபடியாகும் அடிப்படையில் இருந்தால் போதுமானது. எனவே க.பொ.த சா.த பரீட்சை உயர் தரப் பரீட்சை என்பவற்றுக்கான தகைமைகளை பூர்த்திசெய்ய முயற்சியுங்கள்.
வயதெல்லை
பொதுவாக க.பொ.த (உ/த) பரீட்சை பெறுபேற்றை அடிப்படைத்தகையாகக் கொண்டு அரச சேவைக்கு உள்வாங்கப்படுகின்ற முகாமை உத்தியோகர்தர் பதவி கிராம சேவையாளர் பதவி, புகையிர அதிபர் சேவை போன்றவற்றுக்கான உச்ச வயதெல்லலை 30 ஆகும்.
அத்துடன் பட்டம் ஒன்றை அடிப்படையாகக் கொண்ட பதவிகளுக்காக 28 வயது முதல் 45 வயது வரை பதவிகளுக்கு அமைய வித்தியாசமான உச்ச வயதொல்லை காணப்படுகின்றது.
எனவே உயர் தரப் பரீட்சைப் பெறுபேறு அல்லது பட்டம் என்பவற்றை உரிய வயதுக்கு முன்னதாக பெற்றுக்கொள்வது நீங்கள் அரச சேவைக்குப் பிரவேசிப்பதற்கு வாய்ப்பாக அமையும்.
போட்டிப் பரீட்சைகள்
பொதுவாக அனைத்து பதவிகளுக்குமான ஆட்களைச் சேர்த்துக்கொள்ளல் போட்டிப் பரீட்சை ஒன்றினை அடிப்படையாகக்கொண்டே இடம்பெறுகின்றது. நீங்கள் முகாமை உதவியாளராகத் தெரிவு செய்யப்பட வேண்டுமென்றால் இரண்டு பாடங்களிலும் மொத்தப் புள்ளிகளாக 170 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் போதுதான் நீங்கள் தெரிவு செய்யப்பட வாய்ப்பிருக்கின்றது. எனவே ஒரு பாடத்திற்கு சாராசரிப் புள்ளியாக 85 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
போட்டிப் பரீட்சைகளைப் பொறுத்தவரையில் ஏதாவது பரீட்சை ஒன்றிற்காக விண்ணப்பம் கோரப்பட்டு அதற்கான முடிவுத் திகதியாக அறிவிக்கப்படும் தினத்லிருந்து 10 வாரங்களுக்குள் பரீட்வையினை நடாத்தவேண்டும் என்பது பரீட்சைத் திணைக்களம் பின்பற்றுகின்ற விதிமுறையாகக் காணப்படுகின்றது.
எனவே நீங்கள் விரும்புகின்ற பரீட்சைக்கான பாடங்கள் என்ன என்பதனை அறிந்துகொண்டு அதற்காக படிக்கின்ற நடவடிக்கையினை இப்போதிலிருந்ததே மேற்கொள்வது உங்களுக்கு பதவியினைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும்.
நேர்முகப்பரீட்சைகள்
அரச பதவிக்கான நேர்முகப் பரீட்சைகளில் இரண்டு வகைகள் காணப்படுகின்றன.
01, புள்ளி வழங்கப்படாத நேர்முகப் பரீட்சை - இதில் உங்களது சான்றிதழ்கள் மாத்திரம் சரி பார்க்கப்பட்டு பதவிக்குரிய வர்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட தகைடைகள் உங்களிடம் காணப்படுகின்றதா என்பதனை பரிசோதிப்பதற்காக மாத்திரம் இந்த நேர்முகப் பரீட்சை நடாத்தப்படும்.
02. புள்ளிகள் வழங்கப்படுகின்ற நேர்முகப் பரீட்வைகள் -சில பதவிகளுக்காக உங்களிம் காணப்படுகின்ற மேலதிகத் தகைமைகளுக்காக புள்ளி வழங்குகின்ற அடிப்படையில் நேர்முகப் பரீட்சை நடாத்தப்படும். தற்போது விண்ணப்பம் கோரப்பட்டுள்ள கிரமசேவையாளர் பதவிக்கான நேர்முகப் பரீட்சையின்போது சங்கங்களில் அங்கத்துவம் வகித்தல் விளையாட்டுத் துறைகளில் பெற்றுக்கொண்ட போன்ற அடிப்படையில் மேலதிகத் தகைமைகளுக்காக 50 புள்ளிகள் வழங்கப்டும் என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
சில பதவிகளுக்காக பட்டம் பட்டப் பின்படிப்பு போன்றவற்றுக்கும் புள்ளிகள் வழங்கப்படும்.
இது போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விருப்பம் இருப்பவர்கள் குறித்த பதவிகளுக்கான பழைய வர்த்தமானி அறிவித்தலைப் பார்த்து அதற்கு ஏற்ற வகையில் மேலதிகத் தகைமைகளைப் முன்கூட்டியே பெற்றுக்கொள்வது நீங்கள் குறித்த பதவியைப் பெற்றுக்கொள்கின்ற வாய்ப்புக்களை அதிகரிக்கும்.
பிரதேசங்களில் பதிவு-
சில பதவிகளுக்காக குறித்த பிரதேசத்தில், மாவட்டத்தில், மாகாணத்தில் குறித்த அளவு காலம் வசித்திருக்க வேண்டும் என்பதாகவும் வாக்காளர் பதிவட்டையில் பெயர் இருக்க வேண்டும் என்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதற்கமைய நிரந்தரமான பிரதேசத்தில் வசிப்பவர்கள் ஒவ்வொரு வருடமும் வாக்காளர் பெயர் பதிவு செய்கின்ற சந்தர்ப்பத்தில் சரியாக் பதிந்துகொள்வது அவசியமாகும். அத்துடன் வசிப்பிடங்கள் மாற்றமடைந்தால் அடுத்த பரீட்சைக்கு முகம் கொடுக்கும் போது என்ன விளைவுகள் ஏற்படும் என்பதனைப் பொறுத்து புதிய வசிப்பிடத்தில் பதிவு செய்துகொள்வதா? அல்லது புதிய வசிப்பிடத்தை தற்காலிக வசிப்பிடமாக வைத்து பழைய வசிப்பிடத்தையே நிரந்தர வசிப்பிடமாக பேணுவதா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்.
பொதுவாக கடந்த ஐந்து வருடங்களில் தொடர்ச்சியான மூன்று வருடங்கள் நிரந்தரமான வசித்திருக்கவேண்டும் என்றோ அல்லது தொடர்ச்சியாக ஐந்து அல்லது மூன்று அல்லது குறித்த காலப்பகுதி தொடர்ச்சியாக வசித்திருக்கவேண்டும் என்றோ குறிப்பிடப்பட்டிருக்கும்.
அந்த அடிப்படையில் நீங்கள் எதிர்பார்க்கின்ற பதவி குறித்த பழைய வர்த்தமதமானி அறிவித்தல்களை ஆராய்ந்து வசிப்பிடம் தொடர்பான தீர்மானங்களையும் மேற்கொள்வதனைக் கவனத்தில்கொள்ளுங்கள்.
நீதிமன்ற செயற்பாடுகள்
நீங்கள் ஏதாவது தகராறுகளில் சிக்கி நீதிமன்றத்தின் ஊடாக குற்றவாளி என்பதாக தீர்ப்பு வழங்கப்பட்டு அதற்காக சிறைத் தண்டனை அனுபவித்திருப்பின் சிலநேரம் அது அரச தொழில் ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்கு தடையாக அமையலாம். எனவே அரச தொழில் ஒன்றினை எதிர்பார்க்கின்றவர்கள் எந்த பிரச்சினை வந்த போதிலும் பொறுமையாக இருந்துகொள்வது உங்களது அரச தொழில் கனவை அடைந்துகொள்ள உதவியாக அமையும்.
ஏற்கனவே அரச சேவையிலிருந்து நீக்கப்படுதல்
நீங்கள் ஏதாவது அரச சேவையில் இருந்து வினைத்திறன் இல்லை என்ற காரணத்திலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அரச சேவையிலிருந்து நீக்கப்பட்டு உங்களை அரச சேவையிலிருந்து நீக்குவதனை அறியத்தருகின்ற கடித்தத்தில் இறுதியாக "நீங்கள் இனிமேல் எந்த ஒரு அரச சேவைக்கும் விண்ணப்பிக்கின்ற தகுதி இழந்தவராக கருதப்படுவீர்கள்" என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்குமாயின் உங்களுக்கு எந்த அரச தொழிலுக்கும் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே சிறிய பதவிகளில் இருப்பவர்கள் இதனைக் கருத்தில்கொண்டு பொறுமையாக தங்களது கடமைகளை மேற்கொள்வது சிறந்தத.
அர சேவையினைப் காணப்படுகின்ற 4 மட்டங்களுக்காக வித்தியாசமான அடிப்படையில் தகைமைகள் எதிர்பாரக்கபடுகின்றன என்பது குறித்து எமது முன்னைய பதிவில் குறிப்பிட்டிருந்தோம். 4 மட்டஙகள் குறித்தும் அவைகளுக்காக தெரிவுசெய்யப்படுவதற்கு இருக்கவேண்டிய கல்வித் தகைமைகள் குறித்தும் கீழே உள்ள லிங்கில் வாசித்துக்கொள்ளவும். இந்தப் பதிவில் ஒவ்வொரு மட்டத்திலும் உள்ளடங்குகின்ற பதவிகள் குறித்த தனித்தனிப் பதிவுகளின் லிங்குகளும் இணைக்கப்பட்டுள்ளன. அவை குறித்து வாசித்து உங்களுக்குப் பொறுத்தமான பதவியினை இலக்காாக் கொண்டு ஆயத்தங்களைச் செய்து கொள்ளலாம்.
இறுதியாக
அரச சேவையைப் பெறுத்த வரையில் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற ஆகக்குறைந்த தகைமையைப் பெறாதவர்கள் சேவையல் இணைத்துக்கொள்ளப்படமாட்டார்கள். எனவே மேற்படி விடயங்களை கருத்தில் கொண்டு உங்களது அரச சேவைக் கனவை நனவாக்கிக்கொள்ள முயற்சியுங்கள். நீங்கள் ஒரு பெற்றோராக அல்லது ஆசிரியராக இருப்பீர்களானால் இந்த விடயம் குறித்து அறிவூட்டுங்கள். இந்த அறிவுரைகள் யாரோ ஒருவரின் அரச பணி குறித்த கனவை நனவாக்கிக்கொள்ள உதவும்.
ஆக்கத்தின் உரிமை lankajobinfo.com இணையத்தளத்துக்குரியது.