ad

தற்காலிக இடமாற்றம் பெற்றுள்ள தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவித்தல்



நாட்டில் நிவுகின்ற கொவிட் 19 நோய் பரவல் காரணமாக அனைத்து தேசிய பாடசாலைகளிலும் மூடப்பட்டிருக்கின்ற நிலையில் யாரேனும் ஒரு ஆசிரியர் தனது நிரந்தர சேவைத் தளத்திலிருந்து மற்றுமொரு பாடசாலைக்கு தற்காலிக இடமாற்றம் ஒன்றினைப் பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் குறித்த தற்காலிக இடமாற்றத்திற்காக காலம் முடிவடைந்திருப்பின், அவ்வாறான ஆசிரியர்கள், பாடசாலைகள் ஆரம்பமானதன் பின்னர் தங்களது நிரந்தர சேவைத்தளத்திற்கு சென்று சேவையினைப் பொறுப்பேற்க வேண்டும்.

குறித்த தற்காலிக இடமாற்றத்தின் காலத்தினை நீடித்துக்கொள்ள விரும்புகின்றவர்கள் பாடசாலைகள் ஆரம்பமானதன் பின்னர் தனது நிரந்த சேவைத்தளத்தின் அதிபரின் பரிந்துரையுடன் மீண்டும் விண்ணப்பம் ஒன்றினை கல்விப் பணிப்பாளருக்கு  (இடமாற்றம்) சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி அமைச்சின் செயலாளர்.