ad

நாளை முதல் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் பிரகாரமே வௌியில் செல்லலாம்.

இன்று முதல் 31 ஆம் திகதி வரை அமுலாகும் விதத்தில் சுகாதார வழிகாட்டல்கள் வௌியிடுவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணரத்ன நடவடிக்கைமேற்கெண்டுள்ளார்.

அந்த அடிப்படையில் நாளை முதல் அமுலாகும் வகையில் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வௌியில்  செல்லமுடியும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் ஒற்றை இலக்கமாக உள்ளவர்கள் ஒற்றை தினங்களிலும் இரட்டை இலக்கமாக உள்ளவர்கள இரட்டை தினங்களிலும் என்ற அடிப்படையில் வீட்டுக்கு ஒருவர்  வௌியில் செல்ல அனுமதிக்கப்டுவர். இறுதி இலக்கம் பூச்சியம் என்பதாயின் அது இரட்டை இலக்கமாக கருதப்படும் என்பதுடன் தொழில் நடவடிக்கைகள் மற்றும் சுகாதார தேவைகளுக்காகு வௌியில் செல்வதற்கு அனுமதிக்கப்படும் என்பதாக குறித்த வழிகாட்டல்களில் குறிப்பிடப்படுள்ளது. 

அத்துடன் மறு அறிவித்தல்வரை அனைத்து திருமண வைபவங்களுக்கும் தடை விதிக்கப்படுகின்றது. எனினும் 15 பேர்களுக்கு அதிகரிக்காத அடிப்படையில் நெருங்கிய உறவினர்களின் பங்குபற்றுதலுடன் விவாகப் பதிவினை மாத்திரம் மேற்கொள்ளலாம் என்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.