முகநூல் ஊடாக பொய்யான செய்திகளை வௌியிட்ட அரச ஊழியர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்ளத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொத்மலைப் பிரதேசத்தின் காணி நிருணயப் பணிப்பாளர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் கெலிஓய பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.
குறித்த சந்தேகநபரின் முகநூல் கணக்கினைப் பரிசோதித்தபோது காடு அழித்தல் தொடர்பான பல புகைப்படங்கள் காணப்பட்மதாக பொவிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அவ்வாறு பதிவேற்றப்பட்ட புகைப்படங்களைப் பரிசோதித்துப் பார்த்ததில் அவை தனிநபர்களுக்குச் சொந்தமான காணிகளில் இருந்த மரங்கள் அகற்றும் போது எடுக்கப்பட்ட படங்கள் என்தாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டறிந்துள்ளது.
நாட்டின் பிரபலமான காடுகள் அழிக்கப்படுவதாகக் குறிப்பிட்டு மேற்படி புகைப்படங்களும் இணைக்கப்பட்ட அடிப்படையில் குறித்த சந்தேக நபரினால் உண்மைக்கு புறம்பான அடிப்படையில் சமூக ஊடகங்களில் பதியப்பட்டுள்ளது.
சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துவரப்பட்டுருப்பதாகவும், இன்று (22) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளாதகவும் குறிப்பிடப்படுகின்றது.