நாளை முதல் பிரயாணத் தடை நீக்கப்பட்டாலும் பொது மக்கள் கடைபிடிக்கவேண்டிய ஒழுங்குறைகள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அத்தியாவசியத் தேவைகளுக்காக வௌியே செல்ல நேருமிடத்து அடையாள அட்டை இலக்கத்தின் இறுதியாக உள்ள இலக்கத்தின் அடிப்படையில் வௌியில் செல்லலாம். எனினுனம் வௌியில் செல்லும் போது அடையாளஅட்டை எடுத்துச் செல்லவேண்டும். அடையாள அட்டை இல்லாத போது ஓட்டுணர் அனுமதிப்பத்திரம், கடவுச் சீட்டு என்பவற்றைப் பயன்படுத்தலாம்.
அரச அல்லது தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், வாடகை வாகனங்கள் ஓட்டுபவர்கள், நாளாந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்களது கடமைகளுக்கு செல்லாம். தங்களது கடமைக்கு செல்ல அல்லது கடமையிலிருந்து திரும்புவதற்கு மாத்திரமே வௌியில் அவர்கள் வௌியில் செல்லவேண்டும்.
பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் பஸ் வண்டிகளில் ஆசணங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரமே ஆட்களை எடுத்துச் செல்லாம், முட்சக்கர வண்டிகள் வாடகை கார்கள் என்பன இருவரை மாத்திமே ஏற்றிச் செல்லாம்.
பொதுக் கூட்டங்கள் நடாத்துவதற்கும்,. மக்களை ஒன்றுகூட்டுவதற்கும் தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.
கடைகள், ஆடை விற்பனை நிலையங்கள், எரிபொருள் நிரப்பகங்கள் என்பன அவைகளின் கொள்ளவில் 25 % ஆனவர்களையே நிறுவனத்தினுல் ஏற்கலாம்.
மதுபானசாலைகள் காலை 10 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும்.
பாடசாலைகள், மேலதிக வகுப்புகள், பல்கலைக்கழகங்கள் என்பன திற்க்கப்படமாட்டாது..
விவாக வைபவங்கள் என்பன தடை செய்யப்பட்டாலும் 15 பேர் கலந்துகொள்ளும் நிலையில் திருமண பதிவினை மாத்திரம் மேற்கொன்ளலாம்.
மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்தில் ஈடுபட முடியுமானவர்கள் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள் மாத்திரமே என்பதுடன், மத நடவடிக்கைகள், சுற்றுலாவுக்காக மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பது தடைசெய்ப்படுகின்து. இவ்வாறு பயணிப்பவர்களுக்கு தங்க இடம் வழங்குவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
காய்கறி,மீன் போன்ற உணவுப் பொருடங்கள் எடுத்துச்செல்ல அனுமதியுண்டு.
இந்த கட்டுப்பாடுகள் மே மாதம் 31 ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இன்றைய ஊடகவியளாளர்கள் மாநாட்டில் தெரிவித்தார்