ad

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவு வழங்க அரசு தீர்மானம்



பதிவு செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

2021.மே மாதம் 11 ஆம் திகதி நடைபெற்ற கல்வி அமைச்சுடனான கலந்துரையாடலின்போது  முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூபா 2500 மாதாந்த கொடுப்பனவு வழங்க வேண்டும் என்பதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சரினால் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் 2021 ஜூன் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் பதிவு செய்ப்பட்ட முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு 2500 கொடுப்பனவினை வழங்குவதற்கு அவசியமான  நிதி  ஏற்பாடுகளை மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திஇ முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சுக்கு ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஜனாதிபதி செயலாளர் காரியாலயம் ஊடாக நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் சிங்கள மொழிப் பிரதி கீழே இணைக்கப்பட்டுள்ளது.