க.பொ.த சாதாரண தரப் பரீடசையினை ஆகஸ்ட் மாதத்திலும் க.பொ.த உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடாத்துவதற்கான முன்மொழிவொன்று கல்வி அமைச்சரினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.
மேற்படி விடயத்துடன் தற்போது இரண்டு வருடங்களாகக் காணப்படுகின்ற 10 மற்றும் 11 ஆம் தரங்களுக்கான கால அளவினை 01 வருடமும் 09 மாதங்களும் என்ற அடிப்படையில் மாற்றியமைப்பதற்காக கல்வி அமைச்சாரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.
க.பொ.த (சா/த) பரீட்சையின் ஆகஸ்ட் மாதத்திலும் க.பொ.த உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடாத்துவதுடன் அவற்றினது பெறுபேறுகளை 3 மாதங்களில் வௌியிடுவதன் மூலமாக இந்த இரண்டு செயன்முறைக்கும் எடுக்கின்ற 45 மாதங்கள் எனும் காலப்பகுதியை 32 மாதங்களாக குறைத்தலுதல் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மீள் பரிசோதனை செய்வதற்கான பெறுபேறுகள் வௌியிடுவதற்கு முன்னரே Z வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை உள்வாங்குதல்
பெறுபேறு மீள் பரிசோதனையின் மூலமாக பெறுபேறுகள் அதிகதரித்த மாணவர்கள் இருப்பார்களானால் அவர்களுக்கு புதிய Z வெட்டுப்புள்ளி வழங்குவதன் மூலம் உரிய பட்டப்படிப்பினை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கல் என்பன இந்தத் தீர்மானங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களாகும்.
இந்த புதிய நடைமுறை 2023 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
source : newswire.lk