ad

பயணக் கட்டுப்பாட்டின் போது உணவு விநியோகம் உட்பட சில நடவடிக்கைகளுக்கு அனுமதி



இன்று இரவு அமுல்படுத்தப்படுகின்ற பயணக் கட்டுப்பாட்டு நடைமுறையானது தனிப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்திற்கு சமனானது என்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் கலந்துரையாடல் ஒன்றின் போது மேற்படி பயணத்தடையானது ஒரு சில விடயங்களினால் மாத்திரமே தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்திலிருந்து வித்தியாசப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துக் கடைகளும் திறப்பதற்கு அனுமதியில்லை.

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுகின்றவர்கள் தங்களது  தொழில் அடையாள அட்டையுடன் பயணிக்கவேண்டும்.

பாதைகள் நிர்மாணிக்கின்ற நிறுவனங்களுக்கு மாத்திரம் அந்த நடவடிக்கைகளுக்காக அனுமதி வழங்கப்படுகின்றது. அதற்கு அவசியமான பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதியுண்டு.

BOI மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்களினது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதுடன் அதற்கான போக்குவரத்து வசதிகளை அந்தந்த நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்.

மெணிங் மார்கட், பேலியகொடை மீன் விற்பனை நிலையம், பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த வியாபாரத்திற்கு மாத்திரம் திறந்து வைக்கப்படுகின்றன்.

யரேனும் ஒருவர் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக வாடகை வாகனம் ஒன்றினை பயன்படுத்த முடியும் என்ற போதிலும் வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு திரும்ப வரும் போது குறித்த விடயத்தினை உறுதிசெய்தல் வேண்டும்.

மேல் மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றுகின்ற செயற்பாடுகளுக்கான அந்த இடத்திற்கு மாத்திரம் செல்வதற்கான வசதிகள் வழங்கப்படும்.

உணவுப் பொருட்கள் விநியோகங்கள் ஒன்லைன் டிலிவரி ஊடாக மேற்கொள்ளலாம்.

வயல்நிலங்கள், தோட்டங்கள் என்பவற்றில விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதுடன் பிரதான பாதைகள் ஊடாக பயணிப்பதற்கு அனுமதியில்லை

இந்த நடவடிக்ககைகளுக்காக  இன்று இரவு 10 மணி முதல் பொலிஸ் ஊழியர்கள் 20,000 பேர் ஈடுபடுத்ப்படுகின்றனர்.