தற்போது நாட்டில் காணப்படுகின்ற அசாதாரண சூழ்நிலையில் அரச, வங்கி, உள்ளூராட்சி சேவைகள் என பலவிதமான சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடணப்படுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாபதியினால் வௌியடப்பட்டுள்ளது.
தடுப்பூசி ஏற்றுகின்ற நடவடிக்கையினைக் காரணம் காட்டி தாம் தொழிற்சங்கள நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக சில தொழிற் சங்கங்கங்கள் கடந்த நாட்களில் தெறிவிரத்திருந்தமை இங்களு குறிப்பிடத்தக்கது.
அதத்தியாவசிய சேவைகளாக பிரகடணப்படுத்தப்பட்ட சேவைகளின் விபரம்
- 1979 ஆம் ஆண்டு துறைமுக அதிகார சபை சட்டமூலத்தின் 3 ஆம் பிரிவுக்கு அமைய இலங்கை துறைமுக அதிகார சபையின் பணிகளை மேற்கொள்வதற்கு அவசியமாக சேவைகள்.
- பொட்ரோலியம் உற்பத்தி மற்றும் பெற்றோலியம் சார்ந்த பொருட்கள் உட்பட அனைத்து எரிபொருள் வழங்குதல் மற்றும் வினியோகித்தல் தொடர்பான பணிகள்
- துறைமுகங்களில் எண்ணெய்யினை இறக்குதல், வினியோகித்தல், களஞ்சியப்படுத்துதல் போன்ற பணிகளுக்குரிய சேவைகள்
- பொருட்கள் எற்றிச் செல்வதற்கான புகையிர திணைக்களம் அல்லது போக்குவரத்து அதிகாரசபையின் சேவைகள்
- மேற்படி பொது போக்குவரத்து சேவையினை நடாத்திச் செல்வதற்கு தேவையான பராமரிப்பு மற்றும் மேற்பார்வை தொடர்பான சேவைகள்
- அனைத்து மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள். சமூர்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள்,. மற்றும் பிரதேச செயலகங்களின் வௌிக்கள உத்தியோகத்தர்களால் நிறைவேற்றப்படுகின்ற அனைத்து விதமான சேவைகளும் அவற்றுடன் தொடர்புடைய பணிகள் மற்றும் உழைப்பு
- இலங்கை மத்திய வங்கி, அரசாங்க வங்கிகள் மற்றும் காப்புறுதி பணிகளுடன் தொடர்பான சேவைகள்
- உள்ளூராட்சி நிறுவனங்களினால் மேற்மேற்கொள்ளப்படுகின்ற குப்பை அகற்றலுடன் தொடர்புடைய சேவைகள்
.