நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடையானது ஜூன் மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். எனினும் இந்த கால வரையறையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 3 தினங்கள் பயணத் தடை தளர்த்தப்படும் என்பதாகவும் அன்றைய தினம் வீட்டுக்கு ஒருவர் என்ற வகையில் வெளியில் வரலாம் என்பதாகவும் குறிப்பிட்டார் .
வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நாளைய தினம் (25) மே மாதம் 31-ஆம் தினம் ஜூன் மாதம் 4 ஆம் திகதி ஆகிய மூன்று தினங்களில் அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சந்தர்ப்பம் வழங்குவதாக அமைச்சர் தெரிவித்தார் .
பயணத் தடை தளர்த்தப்படுகின்ற காலப்பகுதியில் ஒருவர் மாத்திரம் கடைகள் மருந்தகங்கள் என்பதற்கு சென்று தேவையான பொருள்களை கொள்வனவு செய்துகொள்ளலாம்
பயணத் தடை தளர்த்தப்பட்ட காலப்பகுதியில் மக்கள் வாகனங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பதாகவும் , பயணத் தடை தளர்த்தப்பட்ட காலப்பகுதியில் வீட்டிலிருந்து வெளியில் செல்ல தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் செல்லும் முறை பின்பற்றத் தேவையில்லை என்பதாகவும் குறிப்பிட்டார் .
பயணத் தடை தளர்த்த படுகின்ற காலப்பகுதியில் வங்கிகள் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர் எண்ணிக்கையுடன் இயங்கலாம் என்பதாக ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார் .
நாட்டின் அனைத்து பாடசாலைகளும் ஜூன் மாதம் 7ஆம் திகதி வரை மூடப்படும் என்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார் .
வைத்தியர்களிடம் செல்வதாகவும் , அத்தியவசிய சேவையுடன் தொடர்புடையவர்கள் என்பதாகவும் பொய்யாக குறிப்பிட்டு சிலர் பயணத் தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் வாகனங்களில் செல்வதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் அதுதொடர்பாக விசேட பரிசோதனை நடத்தப்படும் என்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார் .