தன்னார்வ செயற்பாட்டாளர்கள் மாவட்ட ரீதியிலான கண்காணிப்பாளர்கள் மற்றும் தரவுகளை உறுதிப்படுத்துவோர் (பொது சொத்துக்களை பாதுகாத்தல் தொடர்பான நிகழ்ச்சி மற்றும் ApeSalli.lk)
விண்ணப்ப முடிவுத்திகதி : 021.04.09
பின்னணி
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது ஒரு சிவில் சமூக அமைப்பாக இருப்பதுடன் பிரத்தியேகமாக ஊழல் மற்றும் அரச ஆளுகை சார்ந்த நெருக்கடி போன்ற விடயங்களில் பிரதானமாக கவனம் செலுத்துகின்றது. குறிப்பாக ஒன்றிணைந்த கூட்டு முயற்சியினால் ஊழல் ஒழிப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் எதிர்கால இலங்கையை சமத்துவமும் சமாதானமும் நீதியும் நிறைந்ததுமான ஒரு நாடாக கட்டியெழுப்ப செயற்படுகின்றது.
TISL இன் சட்ட பிரிவாக செயற்படுகின்ற சட்ட மற்றும் ஆலோசனை மையமானது (ALAC) ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கான இலவச சட்ட ஆலோசனை வழங்கல் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்கின்றது. சட்ட மற்றும் ஆலோசனை மையத்தின் ஒருபகுதியாக பொது சொத்துக்களை பாதுகாத்தல் (PPPR) மற்றும் பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பாக கண்காணித்தல் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றது.
TISL நிறுவனமானது பொதுச்சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும் அவை தொடர்பாக அறிக்கை சமர்பிப்பதற்குமாக ஒவ்வொரு மாவட்டங்களிலுமிருந்து உணர்வுபூர்வமாக செயற்படக்கூடிய 25 தனிநபர்களைக் கொண்ட தன்னார்வ செயற்பாட்டாளர்களை எதிர்பார்க்கின்றது. தன்னார்வலர்கள் ApeSalli.lk வலைத்தளத்தின் முதன்மை ஆதாரங்களாக செயற்படுவதுடன்> இவ் வலைத்தளமானது பொது சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்த தரவு களஞ்சியமாக செயல்படத் தொடங்கப்படுகிறது. பின்வரும் பணிகளுக்கு மாவட்ட கண்காணிப்பாளர்கள்/ தரவுகளை உறுதிப்படுத்துவோர் பொறுப்பாவார்கள்:
• தங்களுக்கென ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் TISL இன் மையப்புள்ளியாக செயற்படல்.
• TISLக்கு உண்மைத்தன்மையான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட பொதுச்ச்சொத்துக்கள் துஷ்பிரயோகம் பற்றிய சம்பவங்கள் தொடர்பான தகவல்களை வழங்கல்.
• மாவட்ட ரீதியில் தேர்தல் காலங்களில் இடம்பெறும் பொதுச்சொத்துக்கள் துஷ்பிரயோகம் இடம்பெறும் சந்தர்ப்பங்களை கண்காணித்தல்.
• பொதுமக்களால் தேர்தல் காலங்களில் இடம்பெறும் பொதுச்ச்சொத்துக்கள் துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகளை உறுதிப்படுத்தி அம்முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க TISLக்கு உதவிகளை வழங்கல்.
• தரவுகள் சேகரித்தல் மற்றும் அவை தொடர்பான உண்மைத்தன்மையை துல்லியமாக ஆராயும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக பங்கேற்றல்.
• பயிற்சிப்பட்டறைகள் மற்றும் பயிற்சி வழங்கும் நிகழ்வுகள் போன்றவற்றை ஒழுங்கமைப்பதில் TISL க்கு உதவிகளை வழங்கல்.
• அந்தந்த மாவட்டத்துக்கு உட்பட்ட அரச உத்தியோகத்தர்கள்> பத்திரிகையாளர்கள்> சிவில் சமூக மற்றும் சமூக தலைவர்கள் என பலதரப்பட்ட பங்குதாரர்களுடன் சிறந்த உறவை பேணுதல் மற்றும் அவ் உறவினை வளர்த்தல்.
• TISL இனால்நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுடன் பலதரப்பட்ட தொடர்பாடல் சம்பந்தமான பிரச்சினைகளை> காலப்போக்கு> நிகழ்வுகள் அல்லது வேறு விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் மூலம் முறையான தொடர்புகளைப் பேணல்.
• தேர்தல் காலங்களில் மாவட்டத்தின் ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளுக்கும் தேவையான கண்காணிப்பாளர்களை இனங்கண்டு நியமிப்பதுடன் குறிப்பாக தேர்தல் காலங்களில் இடம்பெறும் பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் கவனிக்கவும் சரிபார்க்கவும் ஒரே வலையமைப்பைப் பராமரித்தல்.
விண்ணப்பதாரி கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய தகைமைகள்
• வலுவான வலையமைப்பு மற்றும் தொடர்பாடல் திறன்
• அடிப்படை அல்லது நடுத்தர கணினி அறிவு (குறிப்பாக, சிங்களம் அல்லது தமிழ் தட்டச்சு, மற்றும் மைக்ரோசாப்ட் வேர்ட்,வலைத்தளங்களை கையாளும் திறன், சமூக ஊடகங்களை கையாளும் திறன் மற்றும் ஒன்லைனில் அறிக்கைகளை சமர்ப்பித்தல்.
• வெளிக்கள அறிக்கைகளை தொகுக்கும் திறன்
• தகவலுக்கு செவிமெடுத்தல்,துல்லியமான தகவலை வழங்கல் மற்றும் உயர்தரமான சேவை வழங்கல்.
• TISL இன் கோரிக்கைகளுக்கு அமைவாக மாவட்டங்களுக்கு பயணிக்க கூடியவராய் இருத்தல்
• குறைந்தபட்சமாக ஒரு உள்ளூர் மொழியிலேனும் பேச மற்றும் எழுத தெரிந்திருத்தல் வேண்டும்.
• தேர்தல் கண்காணிப்பு, பத்திரிகை மற்றும் சமூக பணிகளில் முன்னனுபவம் கொண்டிருத்தல் போன்றவை மேலதிக தகைமையாகக் கருதப்படும்.
தன்னார்வ செயற்பாட்டாளர்கள் தேர்தல் காலங்களில் ஒரு கொடுப்பனவையும் தேர்தல் அல்லாத காலங்களில் அவர்களால் செய்யப்படும் வேலைகளுக்கு ஒரு கொடுப்பனவு வழங்கப்படும். மேலதிகமாக கூட்டங்கள், பயிற்சிப்பட்டறைகள் போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படும்.
தயவு செய்து தங்களது பூரணப்படுத்தப்பட்ட சுயவிபரக்கோவையை janithrika@tisrilanka.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். இதன் போது விடயப்பரப்பில்
“மாவட்ட ரீதியிலான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கான தன்னார்வ செயற்பாட்டாளர்கள் அல்லது தரவுகளை உறுதிப்படுத்துவோர்” என குறிப்பிட்டு அனுப்பவும். அத்தோடு தாங்கள் வசிக்கும் மாவட்டத்தையும் குறிப்பிடுக.
விண்ணப்ப முடிவுத்திகதி : 021.04.09