இந்தவார வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடங்கியுள்ள முக்கியவிடயங்கள்
01. பதிவாளர் நாயனம் திணைக்களத்தின் விவாகப் பதிவாளர் பதவிகளுக்கான விண்ணப்பம் தொடர்பான திருத்தம்
பதிவாளர் நாயனம் திணைக்களத்தின் விவாகப் பதிவாளர் பதவிகளுக்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் இறுதித்திகதி 2021.04.12 ஆக மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் வயதெல்லையானது 30 வயதுககுக் குறையாமலிம் 55 வயதுக்குக் கூடாமலும் இருக்க வேண்டும் என்பதாக மாற்றப்பட்டுள்ளது.
அவ்வாறே மேற்படி வர்த்தமானியில் ''பிரிவில் மக்களின் மொழித் தேவைக்கிணங்க இரண்டாம் மொழியில் கடமையினை மேற்கொள்ளும் இயலுமையுடன் இரண்டுக்கு மேற்படாத தவணைகளில் சிங்களம்/தமிழ் மொழிக்காக (பதவிக்குரிய மொழி மூலம்) சிறப்பு சித்திகள் உட்பட (க. பொ. த.) சாதாரண தரப் பரீட்சையில் குறைந்தது சிறப்புச் சித்திகள் மூன்றுடன் (03) ஆறு விடயங்களில் (06) சித்திப் பெற்றிருத்தல் வேண்டும்."
என்பது
''பிரிவில் மக்களின் மொழித் தேவைக்கிணங்க இரண்டாம் மொழியில் கடமையினை மேற்கொள்ளும் இயலுமையுடன் இரண்டுக்கு மேற்படாத தவணைகளில் சிங்களம்/ தமிழ் மொழிக்காக (பதவிக்குரிய மொழி மூலம்) சிறப்பு சித்திகள் உட்பட (க. பொ. த.) சாதாரண தரப் பரீட்சையில் குறைந்தது சிறப்புச் சித்திகள் இரண்டுடன் (02) ஆறு விடயங்களில் (06) சித்திப் பெற்றிருத்தல் வேண்டும்"
எனத் திருத்தப்படுகின்றது
குறித்த பதவி தொடர்பான முழுவிபரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவத்தினை கீழே குறிப்பிடும் லிங்கில் பெறலாம்.
02 வர்த்தக திணைக்களத்தின் நிறைவேற்றுத் தர வகையீட்டின் தரம் iii இனைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2020 தொடர்பான திருத்தம்
வர்த்தக திணைக்களத்தின் நிறைவேற்றுத் தர உத்தியோகத்தர் வகையீட்டின் தரம் II இனைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சையானது 2012.01.07 ஆந் திகதியிலிருந்து பயனுறுதியாகும் வகையிலான PSC/ET/2/1/19/11 ஆம் இலக்கம் கொண்ட அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரினால் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகத் திணைக்களத்தின் நிறைவேற்றுத் தர சேவையின் ஆட்சேர்ப்பு நடைமுறைக்கமைவாக கொழும்பில் 2021, யூன் மாதம் நடாத்தப்படும்.
03. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சிங்கள கலைக்களஞ்சிய அலுவலகம் மற்றும் சிங்கள அகராதி அலுவலகங்களுக்கு உதவியாசிரியர் பதவிக்காக ஆட்சேர்ப்பதற்கான திறந்தஃ மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2021 தொடர்பான திருத்தம்
2021.02.12 ஆந் திகதிய அரசாங்க வர்த்தமானி அறிவித்தலூடாக வெளியிடப்பட்ட மேற்குறிப்பிடப்பட்டுள்ள பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோருதல் தொடர்பான அறிவித்தலில் கீழுள்ள திருத்தங்களை செய்வதற்கு அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அவ் உத்தரவுகளை தயவுடன் அறியத்தரப்படுகின்றது.
I. 4.2 (ஈ) பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள கீழுள்ள வாக்கியத்தை நீக்குதல்
ழூ யாதாயினுமொரு வணக்கஸ்தலத்தில்/ பிரிவெனாவில் வணக்கஸ்தராக பணியாற்றும் எந்தவொரு நபரும் இப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தகுதியற்றவராவார்.
II. 8 ஆம் பிரிவில் VIII ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி, 2021.04.12 ஆந் திகதி வரை நீடிக்கப்படுதல்.
வர்த்தமானி அறிவித்தலைப் பதிவிறக்க