முஸ்லிம் மற்றும் தமிழ் மொழி மூலம் / சிங்கள மூலம் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் பதிவாளர் பதவிகள்
முஸ்லிம் மற்றும் தமிழ் மொழி மூலம் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் பதிவாளர் பதவிகளுக்காக விண்ணப்பங்கள் குறித்து 2021.03.12ஆம்திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழிக்காக விண்ணப்பம் கோரப்பட்ட மாவட்டங்கள்
கொழும்பு மாவட்டம்
நுவரெலியா மாவட்டம்
மாத்தளை மவட்டம்
மன்னார் மாவட்டம்
முல்லைத்தீவு மாவட்டம்
யாழ்ப்பாணம் மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்டம்
திருக்கோணமலை மாவட்டம்
வவுனியா மாவட்டம்
அம்பாறை மாவட்டம்
பதுளை மாவட்டம்
முஸ்லிம் பதிவாளர் விண்ணப்பம் கோரப்பட்ட மாவட்டங்கள்
கண்டி மாவட்டம்
மாத்தளை மாவட்டம்
கேகாளை மாவட்டம்
இர்தினபுரி மாவட்டம்
குறுணாகல் மாவட்டம்
காலி மாவட்டம்
மாத்தறை மாவட்டம்
அம்பாத்தோட்டை மாவட்டம்
மொணராகலை மாவட்டம்
மன்னார் மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்டம்
திருக்கோணமலை மாவட்டம்
அனுதாரபுரம் மாவட்டம்
புத்தளம் மாவட்டம்
வவுனியா மாவட்டம்
அம்பாறை மாவட்டம்
பதுளை மாவட்டம்
இங்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்ட பிரிவில் உள்ள பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் பதிவாளர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
1. விண்ணப்பதாரர் உரிய பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் பிரிவினுள் நிரந்தர வதிவிடதாரியாகவும்
மற்றும் போதியளவான செத்துக்களுக்கு உரித்தான பிரதேசவாசிகளின் மதிப்பினைப் பெறும் ஆளுமையுடையவராகவும் இருத்தல் வேண்டும்.
2. இந்தப் பதவிக்காக ஆண்/ பெண் இருபாலாரும் விண்ணப்பிக்க இயலும்.
3. விண்ணப்பம் கோரப்படும் இறுதித் தினம், விண்ணப்பதாரியின் வயது 30 வருடங்களுக்கு குறையாதிருத்தல் வேண்டும் என்பதுடன், 55 வருடங்களுக்கு மேற்படாதிருத்தல் வேண்டும்.
4. விவாகப் பதிவாளர் பதவிக்காக விண்ணப்பிப்பவர்கள் விவாகமானவராக இருத்தல் வேண்டும் என்பதுடன் தாரமிழந்தவர் அல்லது விவாகரத்தானவராக இருத்தல் கூடாது
5. 'பிரிவில் மக்களின் மொழித் தேவைக்கிணங்க இரண்டாம் மொழியில் கடமையினை மேற்கொள்ளும் இயலுமையுடன் இரண்டுக்கு மேற்படாத தவணைகளில் சிங்களம்/ தமிழ் மொழிக்காக (பதவிக்குரிய மொழி மூலம்) சிறப்பு சித்திகள் உட்பட (க. பொ. த.) சாதாரண தரப் பரீட்சையில் குறைந்தது சிறப்புச் சித்திகள் இரண்டுடன் (02) ஆறு விடயங்களில் (06) சித்திப் பெற்றிருத்தல் வேண்டும்.
கருத்திற் கொள்ளவும்.- க. பொ. த. (சா. த.) அல்லது அதற்கு சமமான பரீட்சையில் ஒரு விடயம் இரண்டு பகுதிகளாக சித்தியடைந்திருக்கும் சந்தர்ப்பங்களில், அது ஒரு விடயமாக கருதப்படல் வேண்டும். அந்த விடயப் பகுதிகள் இரண்டும் சித்தியடைந்திருந்தால் மாத்திரமே அவ்விடயம் சித்தியடைந்ததாகக் கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.
6. பிரிவில் அனைவருக்கும் அல்லது அநேகமானவர்களுக்கு இலகுவாக நெருங்கக்கூடிய பிரிவின் மத்திய இடமொன்றில் அமைந்த பதவியின் கௌரவத்தினை பாதுகாக்கும் விதத்திலான கட்டிடத்தில் அலுவலகத்தினை அமைப்பதற்கும் இயலுமாயிருத்தல் வேண்டும்.
7. விண்ணப்பம் கோரப்படும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்ஃ மேலதிக விவாகம் பதிவு செய்தல் பிரிவிற்கு உட்புகுத்தப்படும் கிராம பட்டியல்கள்ஃ கிராம அலுவலர் பிரிவு, கல்வி மற்றும் ஏனைய தகைமைகள் ஆகிய மேலதிக விபரங்கள் கீழ்க்குறிப்பிடப்படும் அட்டவணையில் குறிப்பிடப்பட்ட மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம் அல்லது உரிய காணி மற்றும் மாவட்டச் செயலகம், கிராம அலுவலர் அலுவலகம், சமுர்த்தி அபிவிருத்திச் சங்க அலுவலகம் மற்றும் தபால் அலுவலகம் ஆகிய பிரிவின் பிரசித்தமான இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவித்தல்களில் பார்த்துக்கொள்ள இயலும்.
8. இதற்காக தேவையான விண்ணப்பங்கள் மற்றும் கிராம பட்டியல்கள்ஃ கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளடங்கிய ''இணைப்பு 1'' உரிய மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் (அரசாங்க அதிபர்) அலுவலகத்தில் மற்றும் உரிய காணி மற்றும் மாவட்டப் பதிவகத்தில் அல்லது பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள இயலும். விண்ணப்பம் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வெப் தளத்திலும் http://www.rgd.gov.lk/ பெற்றுக்கொள்ள இயலும்.
குறித்த விண்ணப்பம் இந்தப் பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது/
9. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2021, ஏப்பரல் மாதம் 01 ஆந் திகதி அல்லது அதற்கு முன்பு அட்டவணையில் குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கிடைக்குமாறு பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.
முஸ்லிம் விவாகப் பதிவாளர்களுக்காக மாத்திரம் கீழ்வரும் நிபந்தனை உட்படுத்தப்படுகின்றது.
* முஸ்லிம் விவாகப் பதிவாளர் பதவிக்காக விண்ணப்பிப்பவர்கள் விவாகமானவராக இருத்தல் வேண்டும் என்பதுடன் தாரமிழந்தவர் அல்லது விவாகரத்தானவராக இருத்தல் கூடாது
குறித்த வர்த்தமானி அறிவித்தல் மற்றும் விபரங்களை கீழ்வரும்லிங்கில் பதிவிறக்கலாம்.