வடக்கு மாகாண பொதுச் சேவையின் காணி வெளிக்களப் போதனாசிரியர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2021
விண்ணப்பாமுடிவுத் திகதி 20.04.2021
சம்பள அளவுத்திட்டம் :-
MN 1 - 2016க்கு ரூபா27, 140 – 10 x 300 - 11 x 350 - 10 x 495 – 10 x 660 – 45, 540/- ஆகும் (ரூபா 28,040/- சம்பள படிநிலைக்கு முன் முதலாவது வினைத்திறமைகாண் தடைப் பரீட்சையில் சித்தி பெறல்வேண்டும்)
கல்வித் தகைமை
விவசாயம்/ விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன்
க.பொத. (உ/த) பரீட்சையில் ஆகக்குறைந்தது ஒரு (01) பாடத்தில் (பொதுப்பரீட்சை தவிர்த்து) சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
அல்லது
(2) க.பொ.த (சா/த)ப் பரீட்சையில் ஒரே அமர்வில் மொழி (தமிழ் / சிங்களம்), கணிதம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருகக் வேண்டும்.
அத்துடன்
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட விவசாயப்பாடசாலை ஒன்றில் பெற்றுக்கொண்ட ஆறு (06) மாதகாலங்களுக்கு குறையாத பயிற்சி நெறியினைக்கொண்ட சான்றிதழினை பெற்றிருத்தல்
தெரிவு செய்யும் முறை ; போட்டிப் பரீட்சை
பரீட்சைப் பெறுபேறுகள் :-
பரீட்சார்த்திகளுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழு செயலாளர் அவர்களால் www.np.gov.lk என்ற வடக்கு மாகாண இணையத்தளம் மூலம் வெளியிடப்படும். பின்னர் பரீட்சைக்குத் தோற்றிய ஒவ்வொரு பரீட்சார்த்திக்கும் தபால் மூலமாக அனுப்பிவைக்கப்படும்.