சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் கீழ்வரும் வரும் உதவிமேற்றன் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போடடிப் பரீட்சை
வடக்கு மாகாண சபையின் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் கீழ்வரும் வரும் உதவிமேற்றன் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போடடிப் பரீட்சையானது வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அவர்களால் நடாத்தப்படும் என இத்தால்
அறிவிக்கப்படுகின்றது.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 12.03.2021 ஆகும்.
சம்பள அளவுத்திட்டம்; 27,140 – 10 x 300 -
11 x 350 - 10 x 495 – 10 x 660 – 45,540/=
ஆட்சேர்ப்பு முறை :-
வலுவிலுள்ள பொது நிர்வாக சுற்றறிக்கைகள், ஆட்சோப் புத்திட்டம், தேசிய மற்றும் மாகாண கொள்கைகள் என்பவற்றிக்கு அமைவாகவும் உதவிமேற்றன் தரம் III க்கான மட்டுப்படுத்தப்பட்ட பதவிக்கான எழுத்துப் பரட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரிகள் கட்டமைக்கப்பட்ட நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படுவர். கட்டமைக்கப்பட நேர்முகப்பரீட்சைக்கு பந்தி 12.2ல்
குறிப்பிடப்பட்டவாறு புள்ளிகள் வழங்கப்படும். எழுத்துப்பரீட்சை மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகப்பரீட்சை என்பனவற்றில் பெற்றுக்கொள்ளும் புள்ளிகளின் கூட்டுத்தொகையின் உயர்புள்ளி வரிசை ஒழுங்கில், நிலவும் வெற்றிடத்திற்கமைவாக நியமனத்திற்கான நேர்முகத் தேர்விற்கு
தெரிவு செய்யப்படுவர்.
கல்வித்தகைமை:-
க.பொ.த (சா/த)ப் பரீட்சையில் ஒரே அமர்வில் மொழி அல்லது இலக்கியம் (தமிழ் / சிங்களம் /ஆங்கிலம்), கணிதம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக இரண்டு (02) பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன்
அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றிலிருந்து ஆறு (06) மாதங்களுக்கு குறையாத சிறுவர் பாதுகாப்பு அல்லது சமூக சேவைகள் தொடர்பான டிப்ளோமா சான்றிதழை பெற்றிருத்தல் வேண்டும்.
தொழில்சார் தகைமை:-
வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்கள சேவையில் நிரந்தரப் பதவியை வகிப்பதுடன் விண்ணப்ப முடிவுத்திகதிக்கு முன்னான 05 வருடகால தொடர்ச்சியானதும் முனைப்பானதுமான சேவைக்காலத்தை கொண்டிருப்பதுடன் அப்பதவியில் உறுதிப்படுத்தப்பட்டும், பொது நிர்வாக சுற்றறிக்கை இல. 03/ 2016 இற்கமைய PL 1 – 2016, PL 2 – 2016, சம்பளக் குறியீடுக்களின் கீழ் சம்பளத்தினைப் பெற்றுக்கொள்ளும் ஓர் அலுவலராக இருத்தல் வேண்டும்.