ad

2022.07.09 ஆம் திகதி கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை

 

2022 ஆம் ஆண்டு பாடசாலை நாட்காட்டிக்கு அமைவாக 2022.07.18 ஆம் தேதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பித்தல்.

2022.07.08 ஆம் திகதியன்று கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளை ஒன்றிணைத்து கல்வி அமைச்சினால் ஒன்லைன் ஊடாக கூட்டம் ஒன்று   நடாத்தப்பட்டது. தற்போது நாட்டிற்காகப்படுகின்ற எரிபொருள் தட்டுப்பாடு, அதன் மூலமாக போக்குவரத்து பிரச்சினைகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில் தொழிற்சங்கங்களின் கருத்துக்களும் பொறப்பட்டதன் பின்னர் 2022.07.11 முதல் 2022.07. 15 ஆம் திகதி வரையில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதுடன் 2022 ஆம் ஆண்டு பாடசாலை நேரசூசி அட்டவணைக்கு அமைய 2022.07.18 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.


ஊடகப் பிரிவு

கல்வி அமைச்சு