எதிர்வரும் திங்கட்கிழமை (13)அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் காணப்படுகின்ற எரிபொருள் தட்டுப்பாடு முற்றும் மின்சார துண்டிப்பு நடவடிக்கை காரணமாக காரியாலய நடவடிக்கைகளை நடாத்திச் செல்லும் போது ஏற்படுகின்ற சிரமங்கள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டதாக அரச பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) அரச விடுமுறையாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததுடன் ஜூன் மாதம் 13ஆம் தேதி திங்கட்கிழமையும் அரச நிறுவனங்களுக்கான விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரச பொது நிர்வாக அமைச்சின் செயலாளரின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.