ad

கர்ப்பிணித் தாய்மார்களை சேவைக்கு அழைக்க வேண்டாம். -




இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

அரச சேவையினை இயல்பு நிலையில் ஆரம்பிக்கப்பட்டாலும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஒரு வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் உள்ள  பெண் உத்தியோகத்தர்களை சேவைக்கு அழைக்காமல் இருக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரச சேவைகள் மாகண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. 

கொவிட் வைரஸின் ஒமிக்கிரோன் போன்ற வகைகள் பரவுகின்ற நிலையில் மேற்படி உத்தியோகத்தர்களுக்காக வழங்கப்பட்டிருந்த வலுகைகளை இரத்துச் செய்திருப்பது பொறுத்தமான விடயமொன்றல்ல என்பதாக பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவிக்கின்றார்.

 சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைக்கு அமைவாகவா? அல்லது எந்த விதமான ஆய்வுகளும் அற்றநிலையிலா? மேற்படி மேற்படி சலுகைகளை நீக்குகின்ற தீர்மானம் மெற்கொள்ளப்பட்டுள்ளது என்ற சந்தேகம் தோன்றுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பிரசவ விடுமுறை தொடர்பான விதிமுறைகள் மற்றும் அது தொடர்பான முழு விபரங்கள் அடங்கிய கட்டுரையினை கீழ் குறிப்பிடும் லிங்கில் கிளிக் செய்து வாசிக்கலாம். 

பிரசவ விடுமுறை கணக்கிடப்படும் விதம் குறித்த கட்டுரை