அரசாங்க பல்கலைக்கழகம் ஒன்றில் மூன்று வருட கலைப் பட்டப்படிப்பு (Art degree) ஒன்றினைப் பூர்திசெய்வதற்காக ரூபா 854,310.00 அரசினால் செலவிடப்படுவதாகக் குறிப்பிடப்படுகின்றது.
அதன் அடிப்படையில் காலைமானிப் பட்டதாரிகள் 1500 பேர்களை உருவாக்குவதற்கு 1281 கோடி ரூபா செலவிட வேண்டியிருப்பதாக அரச கணக்குக் குழு பாராளுமனறத்திற்கு சமர்ப்பித்திருக்கின்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலைப் பிரிவில் பட்டம் பெற்றவர்களின் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்திருப்பதனால் தொழில்களுக்கு அவசியமாகின்ற அடிப்படையிலான விடயங்களை உள்ளடகிய பாடநெறி ஒன்றினை அமைப்பதற்காக தகவல் தொழில் நுட்பம் மற்றும் கணனித் திணைக்களம் ஒன்றினை அமைப்பதற்கு 300 மில்லயன் ரூபா ஒதுக்கப்படுதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.