ad

21 ஆம் திகதி பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்கள் தொடர்பில் வட மேல் மாகாண ஆளுநர் மேற்கொள்ளும் நடவடிக்கை



பாடசாலை ஆரம்பமாகும் தினத்திலிருந்து பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் நவம்பர் மாத சம்பளத்தினை நிறுத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லூர் தெரிவித்தார்.


அத்துடன் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்வதாகவும் ஆளுநர் தெரிவித்தார். குறுணாகலையில் அமைந்திருக்கும் ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்கு (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.  


பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் தினத்தில் பாடசலைக்கு சமூகமளிக்காதிருப்தன் ஊடாக ஒழுக்கவிதிகளுக்கு புறம்பான செயற்பாட்டில் ஈடுபட்டுவிட்டு 25 ஆம் திகதி பாடசாலைக்கு சமூகமளிக்கின்ற ஆசிரியர்களுக்கு பாடசாலைக்குள் நுழைவதற்கு இடமளிப்பதில்லை என்பதாகவும், 25 ஆம் திகதியே பாடசாலைகளுக்கு சமூகமளிப்போம் என்ற நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு  நாளையே பாடசாலைக்கு சமூகமளிப்பதற்கு முயற்சிப்பது சிறந்தது என்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் பாடசாலைகளுக்கு வந்து ஒழுக்க விதிகளுக்கு முரணாக செயற்படுவதற்கு யாரேனும் முயற்சிப்பார்களானால் அவற்றுக்கு உருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்பதாகவும் குறிப்பிட்டார்.   

பாடசாலைகள் மீளத்திறப்பதற்கு எதிராக செயற்படுவது தேசத் துரோகமான விடயமாகும் என்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 வேலை நிறுத்தம் ஒன்று இடம்பெறுகின்ற சந்தர்ப்பத்தில்   வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தொழிலாளர்கள் சட்டத்தின் பிரகாரம் சம்பளம் வழங்கப்படுவதில்லை எனவும், வேலை நிறுத்தம் முடிவடைந்த பின்னர் அவசியப்படுமாயின் சம்பளம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை சட்டத்தரணி என்ற அடிப்படையில் தான் அறிந்திருப்பதாகவம் அவர் மேலும் குறிப்பிட்டார்.  

மூலம் - அருண