மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் தேசிய தெழில்நுட்பவியல்
(3 வருட) டிப்லோமாவுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
உயர் தரப் பரீட்சையில் கணிதத் துறையில் பயின்று பல்கலைக்கழகம் பிரவேசிப்பதற்கு தகுதி பெறாதவர்களுக்கு ஒரு பொறியிலாளர்களாக பட்டம் ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்கு இந்த பாடநெறி உதவி புரிகின்றது.
விண்ணப்ப முடிவுத் திகதி 19.12.2022
பாடநெறி வகைகள்
அ) கடல்சார் கற்கைநெறிகள் (வகை I) ஆ)
(i) கடல்சார் பொறியியல் தொழில்நுட்பம்
(ii) கப்பற்துறை கல்வியும் தொழில்நுட்பமும்
ஏனைய கற்கைநெறிகள் (வகை II)
(i) இரசாயன பொறியியல் தொழில்நுட்பம்
(ii) குடிசார் பொறியியல் தொழில்நுட்பம்
(iii) மின்சார பொறியியல் தொழில்நுட்பம்
(iv) இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு
பொறியியல் தொழில்நுட்பம்
(v) தகவல் தொழில்நுட்பம்
(vi) இயந்திரவியல் பொறியியல் தொழில்நுட்பம்
(vii) பல்பகுதிய தொழில்நுட்பம்
(viii) புடவை மற்றும் ஆடைத் தொழில்நுட்பம்
2.2 கல்வித்தகைமைள்
அ) விண்ணப்பதாரிகள் க.பொ.த. (உ/த) பரீட்சையில், கீழ் குறிப்பிட்டுள்ள பாடங்களில் மூன்றில் (03) சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
(i) பௌதிகவியல்
(ii) இரசாயனவியல்
(iii) இணைந்த கணிதம்
(iv) உயர் கணிதம்
அத்துடன், இலங்கை பரீட்சைகள் ஆணையாளரினால் 2019 அல்லது 2020 அல்லது 2021ஆம் ஆண்டுகளில் நடாத்தப்பட்ட க.பொ.த. (உ/த) பரீட்சைகளில் ஒன்றில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
ஆ) கடல்சார் கற்கைநெறிகள் (வகை i)இற்கு விண்ணப்பிற்கும் விண்ணப்பதாரிகள் க.பொ.த. (ச/த) பரீட்சையில் ஆங்கிலமொழி பாடத்தில் திறமைச் சித்தி ( C Pass) பெற்றிருக்க வேண்டும்.
மேலதிக விபரங்களை கீழுள்ள படிவத்தில் பார்வையிடலாம்.