ad

Art, Esay, poetry. Oratory Competition 2021 - Department of Manpower arid Employment


மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம்
Department of Manpower arid Employment




தொழில் வழிகாட்டி வாரத்தை முன்னிட்டு நடாத்தும் போட்டி நிகழ்ச்சி 

தொழில் வழிகாட்டல் வாரம் - 2021 அக்டோபர் 4 முதல் 10 வரை போட்டிக்கு 23/08/2021 காலை 8.00 மணி முதல் 12:09:2021 இரவு 8.00 மணி வரை நிகழ்நிலைமுறை(online) மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். 

நிகழ்நிலை முறை(online) இணைப்பு குறித்த திகதியுடன் செயலிழக்கப்படும்.

சரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் எதிர்கால போட்டிகள் பற்றிய அனைத்து தொடர்புடைய தகவல்களும் மின்னஞ்சல் வழியாக மட்டுமே தெரிவிக்கப்படும்.

  • சித்திரம்
  • பேச்சு
  • கட்டுரை
  • கவிதை
  • வினாடி வினா

விண்ணப்பத்தில் நீங்கள் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு மாத்திரமே போட்டி தகவல்கள் வழங்கப்படும் எனவே சரியான மின்னஞ்சல் முகவரியை வழங்க வேண்டும்.

வெற்றி பெறுகின்றவர்களுக்கு பெறுமதியான பரிசுகளும்

பாங்கு பற்றும் அனைவருக்கும் அனைவருக்கும் சான்றிழ் வழங்கப்படும். 

மேலும் மாவட்ட ரீதியிலும் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

சித்திரம், பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் வினாவிடைப் போட்டிகளுக்கான நிபந்தனைகள் 

பாடசாலை மாணவர்களுக்கு 


இந்தப் போட்டிகளுக்கு 9, 10, 11 வகுப்புகளில் உள்ள மாணவர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன சித்திரம், பேச்சு, கட்டுரை, கவிதைகளுக்கு பின்வரும் தலைப்புகளில் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். 

  • இலங்கையின் எதிர்கால தொழில் உலகை வெல்ல தொழில் வழிகாட்டுதலின் முக்கியத்துவம், 
  • 21 ஆம் நூற்றாண்டு மற்றும் தொழில் வழிகாட்டலும், 
  • கனவு காண்போம், திட்டமிடுவோம்,வேலை உலகத்தை வடிவமைப்போம்.
  • நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர் சமூகத்தின் பங்களிப்பு.
  • நாட்டிற்கு தொழில் வழிகாட்டுதல் சேவையின் முக்கியத்துவம்


தங்களது விண்ணப்பப்படிவத்துடன் ஆக்கம் இருபக்கங்களும்) புகைபடமாக அனுப்பவேண்டியதுடன் ஆக்கத்திற்கு பின்புறமாக தங்களது பெயர், விலாசம், தரம், வயது, பிரதேசசெயலாளர் பிரிவு, மாவட்டம் என்பவற்றை குறிப்பிடல்
வேண்டும்.

ஆக்கங்களை சமர்ப்பிப்போர் ஆக்கத்தின் பின்புறம் தனது ஆக்கமானது தன் சுயமான ஆக்கம் என்பதனை தானே உறுதிசெய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் உங்கள் ஆக்கங்களை தெளிவான .jpg கோப்பில் (கோப்பு அளவு 2 MB) பதிவேற்றி விண்ணப்ப படிவத்தை நிரப்ப தயாராகுங்கள். விண்ணப்பப் படிவத்தில் பொருத்தமான இடத்தில் பதிவேற்றவும். உதாரணம். உங்கள் பெயர் நிமல் பெரேரா என்றால் அதை NIMAL PERERA.jpg என அமைத்து
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும், 


சித்திரப்போட்டி

நீங்கள் சித்திரத்தை வரைய எந்த ஊடகத்தையும் பயன்படுத்தலாம் (பேஸ்டல்கள், வாட்டர்கலர்கள்). படத்தை வரைய 8.27 X11.59" அளவு காகிதம் அல்லது A-4 அளவு காகிதத்தைப் பயன்படுத்தவும். கவிதைப்போட்டி
கவிதை பந்தியொன்றில் 05 தொடக்கம் 10 கவிதை வரிகள் உள்ளடங்கியதாக இருத்தல் வேண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பொன்றின் கீழ் கவிதையை எழுத வேண்டும்.




கட்டுரைப்போட்டி
300 முதல் 500 சொற்கள் மற்றும் 2-3 பக்கங்கள் -4 க்கு இடையில் இருக்க வேண்டும்.


பேச்சு போட்டி

2 முதல் 3 நிமிடங்களுக்குள் பேசவேண்டும். மேலும் விபரங்கள் போட்டி நடைபெறும் நாளில் அறிவிக்கப்படும்.

வினாவிடைப் போட்டி
தொழில் வழிகாட்டல் என்ற தலைப்பில் கேள்விகள் கேட்கப்படும்.
நிகழ்நிலைமுறைfonline மூலம் 25 கேள்விகள் அடங்கிய பல்தேர்வு வினாத்தாள் வழங்கப்படும். காலம் 30 நிமிடங்கள். 


பெரியவர்களுக்கு கட்டுரை திறந்த போட்டி

இந்தப் போட்டியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். 

  • இந்த போட்டிக்கான தலைப்புகள்,
  • சிறந்ததொரு தொழிலாக முயற்சியாண்மை,
  • தொழில் முயற்சியாண்மை மூலம் பொருளாதாரத்தை வெல்லுங்கள் 
  • முயற்சியாண்மை கலாசாரத்தை உருவாக்குதல்
  • மேற்படி தலைப்புக்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து கட்டுரை எழுத வேண்டும்
  • 750 - 1000 சொற்களைக் கொண்டதாக கட்டுரை அமைய வேண்டும்.

 

ஒன்லைன் விண்ணப்பப் படிவத்தை இங்கே பெறுங்கள்: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdDsypCJH_2UmnTN6BX6Zaz0cQr6nx5mvSB0GJqNAYL6tjaSQ/viewform

விண்ணப்பதாரர்கள் இந்த கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட போட்டிகளுக்கு பதிவு செய்ய வேண்டும். 

நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்கிறீர்கள் என்றால், இந்த விண்ணப்பங்கள் ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியாக நிரப்பப்பட வேண்டும். மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்கள உத்தியோகத்தரின் பிள்ளைகள் இந்த போட்டியில் கலந்து
கொள்ள முடியாது திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் முடிவே இறுதியானது.




மேலதிக தகவல்களுக்கு:
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் இணையதளம்: https://www.dome.gov.lk
முகநூல் பக்கம் https://www.facebook.com/dome.gov.official
ஒவ்வொரு பிரதேச, மாவட்ட செயலகத்தில் உள்ள எமது திணைக்கள உத்தியோகத்தரிடமிருந்து