உலகிலேயே மிகவும் பிரபல்யமான வட்சப் செயலியினை தொலை பேசி இல்லாமலேயே பயன்படுத்துவதற்கான புதிய வசதியினை விரைவில் வழங்குவதற்கு குறித்த நிறுவனம் தீர்மானித்திருக்கின்றது.
வட்டசப் சேவையின் தாய் நிறுவனமான பேஸ்புக் நிறுவதை்தினால் இதற்கான தொழில்நுட்ப பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன,.
தற்போதும் மடிக் கணனி, டெஸ்டொப் கணனி என்பவைகளில் வட்சப் பயன்படுத்துகின்ற வசதி வழங்கப்பட்டிருப்பினும் குறித்த வட்சப் செயலி நிறுவப்பட்டுள்ள ஸ்மாட் தொலைபேசி இணையத்துடன் இணைக்கப்பட்தாக இருக்கும் போது மாத்திரமே உபயோகிக்க முடியுமாக உள்ளது,.
புதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்ற வசதியின் பயனாக வாடிக்கையாளர்களின் தொலைபேசியின் பெட்டரி தீர்ந்து தொலைபேசி செயலிழந்து போகும் நேரத்திலும் வட்சப் ஊடாக தகவல்களை அனுப்ப முடிகின்றது.
இன்றளவில் உலகம் முழுவதும் இருக்கின்ற 2 பில்லியன் அளவினர் வட்சம் செயலியினை உபயோக்கின்றனர் என்பதாக குறித்த நிறுவனம் குறிப்பிடுகின்றது.