ஆசிரியர்களுக்கான தடுப்பூசி வழங்குகின்ற நடவடிக்கை முடிவடைந்ததும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்ககைகளை ஆகஸ்ட் மாத்தில் மேற்கொள்ளப்போவதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரீஸ் தெரிவித்தார்.
பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதனை உத்தியோகபூர்வமாக இன்று (12) ஆரம்பித்து வைத்த போதே இதனைக் குறிப்பிட்டார்.
ஒரு வருட காலம் கல்வி இல்லாமல் போவதனால் ஏற்படும் நட்டத்தை ஈ செய்ய முடியாது என்பதாக குறிப்பிட்ட அமைச்சர் பாடசாலைகளை தொடர்ந்தும் மூடி வைக்க முடியாது என்பதாகவும் குறிப்பிட்டார்.
சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக பாடசாலை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.