கல்வி அமைச்சருக்கும் ஆசிரியர் சங்கங்களுக்கு இடையே இன்று காலை (20) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்மானங்கள் எதுவும் இன்றி முடிவடைந்ததாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார் .
எனவே தற்போது மேற்கொள்ளப்படுகின்ற ஒன்லைன் கற்பித்தல் வேலை நிறுத்தமானது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் நாளை மறுநாள் (22) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாகவும் தெரிவித்தார் .
தற்போது காணப்படுகின்ற ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முன்மொழிவொன்றை அடுத்த திங்களன்று (26) அமைச்சரவையில் சமர்ப்பிக்க இருப்பதாக அமைச்சர் தெரிவித்திருந்த போதிலும் நிரந்தரமான தீர்மானம் ஒன்று கிடைக்கும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார் .
அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பல்லேவல பன்ஜாசேகர தேரர், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட ஆசிரியர் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்குகொண்டனர்
டயானா உதயங்கனி - லங்காதீப