தங்களது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பொருத்தமான தீர்வுகளைப் பெற்றுத் தரும் வரை தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடர்வதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது .
ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கா தேவைப்பாடு கல்வி அதிகாரிகளிடம் இருப்பதாக தெரியவில்லை என்பதாக குறித்த தொழிற்சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பித்து சில நாட்கள் கழிந்து இருக்கின்ற நிலையிலும் அரச தரப்பில் எந்த ஒரு அதிகாரியும் கலந்துரையாடுவதற்காக இதுவரையில் அழைப்பு விடுக்கவில்லை என்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் ஒன்றிணைந்து கடந்த 12ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்து இருப்பததன் விளைவாக இதுவரை நடந்துவந்த ஒன்லைன் கற்பித்தல் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதன் விளைவாக அதிகளவான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது .
அருண.