கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்துதல் மற்றும் பரீட்சை கடமைகளுக்காக வழங்கப்படவேண்டிய சுமார் 70 கோடி ரூபா அவிலான கொடுப்பனவானவுகள் இதுவரை வழங்கப்படவில்லை என்பதாக அருண பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது .
இந்த கொடுப்பனவை நேற்றைய தினத்தில் (30) வழங்கி முடிக்க விருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அருண பத்திரிகைக்கு அறிவித்திருந்தார் . கடந்த காலங்களில் அலுவலக ஊழியர்களின் பற்றாக்குறை நிலவியதே இதற்கான காரணம் என்பதாக குறிப்பிட்டிருந்தார் .
தற்போது நாட்டில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் இந்த கொடுப்பனவுகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவது குறித்து ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்கள் தமது அதிருப்தியை தெரிவித்திருந்தன.
பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணி மற்றும் பரீட்சைக்கான பணிகளில் சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டதனர். அத்துடன் உரிய கொடுப்பனவுகளை பரீட்சைத் திணைக்களம் வழங்காமை தொடர்பில் கண்டனங்களை தெரிவிக்கின்றனர் .